Skip to main content

பாண்டிச்சேரி சென்ற அனுபவங்களாக (மணக்குள விநாயகர்)...

 

பாண்டிச்சேரி சென்ற அனுபவங்களாக...

(மணக்குள விநாயகர்)

          எங்கள் குடும்ப நண்பர் பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் கார்னர் என்ற பேக்கரி வைத்துள்ளார்கள். பிரெஞ்ச் கார்னர் பேக்கரி பல கிளைகள் கொண்டு செயல்படுகிறது. அவர்களின் இரண்டாவது மகன் மிதுன் அவர்களின் திருமணத்திற்குச் சென்றோம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

          இன்று (27.08.2025) விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் காலை 6 மணிக்குத் திருச்சியிலிருந்து காரில் பாண்டிச்சேரி சென்றோம். புதுசேரி – திண்டிவனம் மெயின் ரோடில் இருக்கும் சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் என்ற இடத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமணம் மகாகாளீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் விடியற்காலை 4.30- 6.00 மணியில் நடைபெற்றது. சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் இடத்திற்கு நான் சென்றேன். வரவேற்பு வைப்பதற்கு ஏற்ற இடம். காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டோம். மணமக்களைப் பார்த்து விட்டு மணக்குள விநாயகரைப் பார்க்கச் சென்றோம்.

மணக்குள விநாயகர்

          காலை 10.00 மணிக்கு நாங்கள், நண்பரின் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. இருந்தாலும் வரிசையில் நின்று அரை மணிநேரம் காத்திருந்து விநாயகரைத் தரிசித்து விட்டு வந்தோம். நன்கு திருப்தியாகவும், மனமகிழ்ச்சியாகவும் இருந்தது. பிறகு பிரசாதம் கொடுத்தார்கள். நன்கு சிறப்பாக விநாயகர் சதுர்த்தி முடிந்தது. 

        கோவிலில் அழகான ரங்கோலி வரைந்திருந்தார்கள். அந்த ரங்கோலியில் பார்வதி விநாயகரை மடியில்  வைத்திருப்பதைப் போன்று அழகாக வரைந்திருந்தார்கள். அந்த ரங்கோலி மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் வரைந்திருந்தார்கள். மிகவும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.



விநாயகர் சதுர்த்தி

மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும். கோவில் சுற்றுபுற சுவர்களில் அதைபோல் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளது.

இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகள் பல்வேறு அளவுகளில், வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள் பொதுவாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாலேயே தயாரிப்பதால், அவை இயற்கை அமைப்புக்கு எவ்விதமான பாதகத்தையும் விளைவிப்பதில்லை.

புரொமனேட் கடற்கரை 



          புரொமனேட் கடற்கரை (Promenade Beach)  பாண்டிச்சேரியை ஒட்டிய கடற்கரையில் மிகவும் பிரபலமானது. இது வங்காள விரிகுடாவுக்கு கரையாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கடற்கரைக்குச் சென்றேன்.



          கடற்கரைக்குச் சென்று வந்துத் திருச்சிக்குக் கிளம்பினேன். காலை 11.30 மணியளவில் கிளம்பினேன். திருச்சிக்கு மதியம் 2.30 மணியளவில் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் பெரம்பலூர் – திருச்சி பைபாஸில் உள்ள சங்கீதாஸ் ஓட்டலில் மதியம் உணவை முடித்து வீட்டுக்கு வந்தோம்.

          இந்த நாள் மிகவும் சிறப்பாக இனிதே அமைந்தது.

அனைவரும் விநாயகர் தின வாழ்த்துகள்!

 

.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...