Skip to main content

மயில் & கான மயில்

  மயில் & கான மயில்        இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினம் மயில். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் பல நாடுகளிலும் இப்போது மயில் பரந்து விரிந்து காணப்படுகிறது.             ஒரு காலத்தில் காடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த மயில், தற்பொழுது கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும் பச்சையும் கலந்த மிக நீண்ட கண் போன்ற சிறகுகளில் அமையப் பெற்றுக் காணப்படும். உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோகையைக் கொண்டு இருக்கும். ஆண் மயில் வால் பகுதியில் மேலாகக் காணப்படும்.             நீண்ட வண்ண மயமான இறகுகளில் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பள்ளி பருவ மாணவர்களை இது மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இந்த அழகிய மயிலிறகு...

முகப்புப் பக்கம்


அனைவருக்கும் வணக்கம்


எனது வலைதளத்தில் இடம்பெறும் அனைத்துத் தரவுகளும்,  தமிழ் இலக்கியம் பயிலும் மாணவ- மாணவியர்கள்,  தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் நம் தமிழ் இலக்கியங்கள் வழி நம் மொழியின் சிறப்புக்கள், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்,  தொழில் நுட்ப செய்திகள்,  வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தையும் வெளியிட்டு வருகிறேன். 

எனது நோக்கம் நம் தமிழ் மொழியின் சிறப்புக்கள் அனைத்தும் நம் சந்ததியினர் மட்டுமல்லாமல், நம் வருங்கால சந்ததியினரும்  அறிந்து பயன்பெறும் வகையில் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற  எண்ணத்தின் வெளிபாட்டில் உருவானது இந்த அறிவுச்சாரல் என்னும் வலைதளம். 

இவ்வலைதளத்தில்,

படைப்புகள் - என்னும் பக்கத்தில் நான் வெளியிட்டுள்ள நூல்கள், மற்றும் நான் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் குறித்து  வெளியிட்டு வருகிறேன்.

கட்டுரைகள் - என்னும் பக்கத்தில் பல நூல்களிலிருந்து பெற்ற தரவுகள் சார்ந்த கட்டுரைகள் இளங்கலை, முதுகலை, மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

இலக்கியப் பேழை - என்னும் பக்கத்தில் எனக்குப் பிடித்தப் பகுதிகளையும், எனது எண்ணங்களின் வெளிபாடுகளையும் பகிர்ந்து வருகிறேன். 

அறிவுச்சாரல் வலைதளத்தை  எனக்கு அழகாக உருவாக்கிக் கொடுத்த எனது மருமகன் சபரிநாத் மற்றும் எனது புதல்வி சங்கீதா அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் எப்பொழுதும் உற்சாகமாகவும், மகிழ்வுடனும் இருக்கப் பெரிதும் காரணமாக இருக்கும்  எனது பெயர்த்தி சாரா சபரிநாத் அவர்களுக்கு நன்றியினை உரித்தாக்குகிறேன். எனது வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் எனது கணவர் சந்திரசேகரன் அவர்களுக்கு நன்றிகள் பல.

இந்த வலைதளம் துவங்கி (சூலை - 2022 - சூலை- 2025) மூன்றாண்டு நிறைவு பெற்றுள்ளது.  இதுவரை எனக்கு  ஆதரவு அளித்து ஊக்கம்  கொடுத்துவரும் அனைத்துத் தமிழ் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள். 


என்றும் அன்புடன், 

கி.கீதா 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...