மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம் பழந்தமிழர் மலர்களைக் கண்ணியாகவும் , கோதையாகவும் மாலையாகவும் மட்டுமன்றித் தழையுடன் சேர்த்து மலர்களை ஆடையாகவும் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் . நோய்கள் தம்மை அணுகாதவண்ணம் மருத்துவ அறிவுடன் மலர்களின் குணங்களை அறிந்து நன்கு பயன்படுத்தினர் . வேந்தரும் , மறவரும் , புலவரும் , பாணரும் , பொது மக்களும் என அனைவரும் நாள்தோறும் தலையில் சூடியும் , மாலையாக அணிந்தும் மலர்களோடு தோற்றமளித்ததைச் சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம் . அக்கால மக்கள் மலர்களின் தன்மைகளை அறிந்தே பயன்படுத்தியுள்ளனர் . சங்க இலக்கியத்தில் மலர்கள் பயன்படுத்திய விதம் கல்வி வளர்ச்சிக்கும் , அறிவு வளர்ச்சிக்கும் தேவையான மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மையுடையது தாமரை மலர் . இம்மலரை , பாணரும் , விறலியரும் சூடினர் என்பதை , ...