வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில் இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...
சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம் பழந்தமிழர் மலர்களைக் கண்ணியாகவும் , கோதையாகவும் மாலையாகவும் மட்டுமன்றித் தழையுடன் சேர்த்து மலர்களை ஆடையாகவும் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் . நோய்கள் தம்மை அணுகாதவண்ணம் மருத்துவ அறிவுடன் மலர்களின் குணங்களை அறிந்து நன்கு பயன்படுத்தினர் . வேந்தரும் , மறவரும் , புலவரும் , பாணரும் , பொது மக்களும் என அனைவரும் நாள்தோறும் தலையில் சூடியும் , மாலையாக அணிந்தும் மலர்களோடு தோற்றமளித்ததைச் சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம் . அக்கால மக்கள் மலர்களின் தன்மைகளை அறிந்தே பயன்படுத்தியுள்ளனர் . சங்க இலக்கியத்தில் மலர்கள் பயன்படுத்திய விதம் கல்வி வளர்ச்சிக்கும் , அறிவு வளர்ச்சிக்கும் தேவையான மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மையுடையது தாமரை மலர் . இம்மலரை , பாணரும் , விறலியரும் சூடினர் என்பதை , ...