Skip to main content

மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்!

  மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்! 22.02.2026 ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை ஈரோடு அருகில் அந்தியூரில் என் தோழி தேவியின்   (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்) மகளுக்கு ஆரா மஹாலில் திருமணம் நடைபெற்றது. நானும் என் தோழி நா. பிரியா (திருச்சி, தந்தைப் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்) அவர்களும், அவர்களின் கணவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பினோம். காலை 8 மணிக்குத் திருமணம் நடைபெறும் அந்தியூருக்குச் சென்றோம். திருமணம் முடிந்தவுடன் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மேட்டூர் அணைக்குச் சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல ஊர்களை விழுங்கிய அணை சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின் எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைதான் மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம். காவிரிபுரம் என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக...

சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம்

 

சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம்

                பழந்தமிழர் மலர்களைக் கண்ணியாகவும், கோதையாகவும் மாலையாகவும் மட்டுமன்றித்  தழையுடன் சேர்த்து மலர்களை ஆடையாகவும் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். நோய்கள் தம்மை அணுகாதவண்ணம் மருத்துவ அறிவுடன் மலர்களின் குணங்களை அறிந்து நன்கு பயன்படுத்தினர்.

வேந்தரும், மறவரும், புலவரும், பாணரும், பொது மக்களும் என அனைவரும் நாள்தோறும் தலையில் சூடியும், மாலையாக அணிந்தும் மலர்களோடு தோற்றமளித்ததைச் சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம்.  அக்கால மக்கள் மலர்களின் தன்மைகளை அறிந்தே பயன்படுத்தியுள்ளனர்.

சங்க இலக்கியத்தில் மலர்கள் பயன்படுத்திய விதம்

                கல்வி வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவையான மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மையுடையது தாமரை மலர். இம்மலரை, பாணரும், விறலியரும் சூடினர் என்பதை,

                பாணர் தாமரை மலைய...” புறம் . 12:1

                தலைவன் தாமரை மலைய விறலியர்” (மலை.569)

                சில்வளை விறலி செல்குவை யாயின்

                வள்ளிதழ்த் தாமரை நெய்தலொடரிந்து”  (பதி.78:4,5)

எனப் புற இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

               முல்லை, மல்லிகை முதலான மணம் பரப்பும் மலர்களைத் தலையில் சூடுவதால் மனத்தெளிவும், மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும் மனஅழுத்தம் நீங்கும் தன்மையுடையன. இத்தகைய மணம்மிக்க மலர்களை சங்ககாலத்தில் தெருக்களில் கூவி விற்கும் தன்மையைப்,

                பித்திகை விரவுமலர் கொள்ளீரோ வென

                வண்டுசூழ் வட்டியள் இருதருந்

                தண்டலை உழவர் தனிமட மகளே” (நற் 97:7)

என நற்றிணை மூலம் அறியலாம். அதன் தன்மைகளை உணர்ந்த சங்ககாலப் பெண்டிர் தம் கணவர் அருகிலிருக்கும் வேளைகளில் மட்டுமே அவற்றைச்சூடிக் கொண்டனர் என்பதை,

                பாணர் முல்லை பாட சுடர்இழை

                வாள்நுதல் அரிவை முல்லை மலைய

                இனிதிருந் தனனே நெடுந்தகை

                துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே” (ஐங் .408)

என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் கணவன் பொருளீட்டுதல், போர் முதலான காரணங்களுக்காகப் பிரிந்திருந்த காலங்களில் சங்க கால மகளிர் மலர் அணிவதில்லை என்பதை,

                புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்

                பைதலுண்கண் பனிவார் புறைப்ப” – (புறம்.194:3,4)

என்ற புறநானூற்றுப் பாடல் உணர்த்துகின்றன.

                தம் புதல்வரின் குழந்தைப் பருவத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பெற்ற தொட்டிலில் இட்டு தாலாட்டியுள்ளதை,

                குறுங்காற் கட்டில் நறும்பூஞ் சேக்கைப் 

                பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்

                புதல்வன் தழீஇயினன்”         -குறுந் . 359

என்ற குறுந்தொகைப் பாடல் உணர்த்துகிறது.

தற்கால மலர் மருத்துவம்

                மனநலமும் உடல்நலமும் ஒன்றோடொன்று தொடர்புடையன. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. மனித உடம்பில் நோய்கள் தோன்றப் பெரும்பாலும் மனநலமின்மையே காரணமாக அமைகிறது. கோபம், பொறாமை, பயம், பகைமை, உணர்ச்சி, பொறுமையின்மை, அதிர்ச்சி, வெறுப்பு முதலான எண்ணங்கள் மனநிலையைக் கெடுத்து, உடல் நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இவ்வாறு மனநிலையால் உடல்நிலை நோயுறும்போது அந்நோயைத் தீர்க்க மலர்களிலிருந்து தயாரிக்கப்பெற்ற மருந்துகளைக் கொண்டு குணம்பெறச் செய்வதே தற்கால மலர் மருத்துவம் ஆகும்இம்மருவத்துவம் இன்று உலகின் பல நாடுகளில் புகழ்பெற்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சார்ந்த எட்வர்டு பாட்ச் என்ற ஆங்கில மருத்துவரால் இம்மலர் மருத்துவம் உலகெங்கும் அறிமுகமானது.

நிறைவாக,

                பழந்தமிழர் மனத்தையும், உடலையும் கெடுக்கும் எதிர்மறை எண்ணங்கள் இன்றி, நலமுடனும், மகிழ்வுடனும் வாழ்வதற்கு மலர்களின் தன்மையையும், மருத்துவக் குணங்களையும் நன்கு அறிந்தே பயன்படுத்தியுள்ளனர். மலர்களின் அழகையும் மணத்தையும் மட்டுமின்றி, மருத்துவக் குணங்களையும் நன்கு அறிந்தமையால், அவற்றைத் தம் அகவாழ்விலும், புறவாழ்விலும்  பயன்படுத்தி மகிழ்ந்தனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...