Skip to main content

வேப்பமரத்தின் பலன்கள்

 

வேப்பமரத்தின் பலன்கள்

 

        ஒரு மனிதன் வாழ பிராண வாயு தேவை. அதற்குப் பல மரங்கள், செடி, கொடிகள் நிறைந்தக் காடுகளை இயற்கை நமக்காகப் படைத்திருக்கிறது. ஆனால் இதன் உண்மையை உணராது நமது தேவைக்காக மரங்களை வெட்டி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். இதன் விளைவால் நமக்குத் தேவையான பிராண வாயு குறைகின்றது. இப்படிப்பட்ட பெருமிகு மரத்தில் வேப்பமரமும் மிக முக்கிய மரமாகும்.அதிகப்படியான பிராணவாயுவை வெளிவிடக் கூடியது. அதே நேரம் வேப்பமரம் சுற்றுப்புறத்தைச் சுத்திகரிக்கக் கூடிய சக்தியும் அதிகம் உண்டு. ஆகையால் மஸ்கட் போன்ற பாலைவன நாடுகளில் நெடுஞ்சாலை இருமருங்கிலும் மற்றும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வேப்பமரம் வைத்து பராமரிக்கிறார்கள்.

வேப்பமரத்தின் பலன்கள்

          வேப்பமரத்தினால் பல நன்மைகள் உள்ளன. வேப்பமர நிழல் உடலுக்கு நல்லது. அதன் காற்றைச் சுவாசிக்க நலன் பல உண்டாகும். நுரையீரல் மற்றும் தோல் வியாதிகளைத் தடுக்கும் சக்தி உள்ளது என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

·                         மேலைநாடுகளில் ஆராய்ச்சி செய்து வேப்பமரக்கட்டை பூச்சி, கரையான்களினால் தாக்கம் பெறாது என்று கூறியுள்ளனர். மனிதர்களுக்குக் குடல்புண்ணை ஆற்றுவதற்கும், வயிற்றுப் பூச்சிகள் அழிப்பதற்கும் வேப்பிலையைச் சாப்பிடலாம். வேப்ப எண்ணெய் இயந்திரங்கள் இலகுவாக இயக்க உதவுகின்றன. இதனைத் தெளிப்பதனால் வீட்டுக்குள் பூச்சிகள் வருவதில்லை.

·                     எண்ணெய் எடுத்தப்பின் வேப்பங்கொட்டையைப் பொடி செய்து நிலத்திற்கு உரமாக உபயோகிக்கிறார்கள். இதனால் செடிகளைத் தாக்கும் பூச்சிகளிலிருந்து செடிகள் காப்பாற்றுப்படுகின்றது.

·                  முட்டைக்கோஸ், காலிஃபிளவரைப் புழு, பூச்சி, வெகுவாகத் தாக்கும். ஆகையால் இவற்றிற்குக் கட்டாயமாக வேப்பம் புண்ணாக்கை அதிகமாக உபயோகிக்கிறார்கள்.

·        இது மிக முக்கிய இயற்கை கிருமி நாசினி. ஆகையால் மக்களுக்கும், ஆடு, மாடு, நாய், பூனை போன்ற எந்த மிருகங்களுக்கும் எந்த வகைப் பாதிப்பும் இல்லை.

·        வீட்டின் முன் வேப்பமரம் வைத்திருந்தால் அக்காற்றைச் சுவாசிக்கும் போது வியாதிகள் வராது.

·                           பறவைகள் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும், இறகுகள் உதிரா வண்ணம் இருக்கவும், இறகுகள் மென்மையாக, மிருதுவாக, ஆரோக்கியமாக, பளப்பளப்பாக இருக்க வேப்பம் பழங்களை உண்ணுகின்றன. பேன், பொடுகு உள்ளவர்கள் இதைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நிவாரணம் பெறலாம்.

நிறைவாக,

          வேப்பமரத்தினால் எத்தனையோ நன்மைகள் கிடைக்கின்றன. ஆகவே மக்கள் வாழும் இடங்களில் பயிரிட்டு, நோயுற்ற வாழ்வைப் பெறலாம் என்பதை உணர்வோம். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்யிற்காக அலைய தேவையில்லை. வெளிநாடுகளில் ஆராய்ச்சி செய்து அதன் பலனை உணர்ந்து, உபயோகிக்க வகை செய்கிறார்கள். நாம் நமக்கு இயற்கை தந்த அபரிமிதமான பெரும் சொத்தை நாம் அலட்சியப் படுத்துவதுடன், செயற்கைப் பொருள்களை உபயோகித்து அவதிப்படுகிறோம்.

மரங்கள் அதிகம் இருந்தால் நிலத்தில் ஈரத்தை ஈர்த்து வைக்கும். அது குறைவதால் தான் பூமி வெப்பமயமாதல் அதிகமாகி வருகிறது.  

         

         

 

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...