Skip to main content

திருவையாறு சென்ற அனுபவங்கள் (நூல் வெளியீட்டு விழா)

  திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா )               திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம்   கொள்கிறேன் .            திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...

அரசும் வேம்பும்

 

அரசும் வேம்பும் 

        பிள்ளையில்லாதவர்கள் அரசும், வேம்பும் இணைந்த மரத்தைச் சுற்றி வந்தால் பிள்ளை உண்டாகும் என்பர். இதை அஞ்ஞானம் என்பர். இதை விஞ்ஞான அடிப்படையில் பார்த்தால், இயற்கையில் நமக்குப் பல வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றது. அரச மரம் அதிக அளவான பிராண வாயுவை வெளியிடக் கூடியது. அதனால் மரத்திற்கு அரசன் என்ற பொருளில் அரசமரம் என்று பெயர். அதே போல் வேப்பமரம் அசுத்தத்தை, (Pollution) சுத்தரிகரிக்கக் கூடிய தன்மை கொண்டது. வேப்பமரக்கன்று உடல் நலத்திற்கும் நல்லது. ஒரு கிருமி நாசினியும் கூட, அதைப்போல அரசமரக்காற்றும், வேப்பமரக்காற்றும் சேர்ந்து வீசும் இடத்தில் வைட்டமின் E சத்து அதிகமாகக் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் ஹார்மோன் பக்குவநிலை பெற்று, கர்ப்பம் தரிக்கச் சாதகமான சூழ்நிலை ஏற்படுகின்றது.

இப்படி மெய்ஞ்ஞானக்  கருத்தான வேம்பு, அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உண்டாகும் என்ற நம்பிக்கை விஞ்ஞான ரீதியான உண்மை என்பதை உணரலாம். இப்படி ஒவ்வொரு மெய்ஞ்ஞான நிகழ்ச்சியும் விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ந்தால், ஆழ்ந்த தத்துவங்களை அறியலாம்.

ஆத்மாவையே ஆராய்ச்சிப் பொருளாகக் கொண்டு ஆழ்ந்த, தெளிந்த ஆணித்தரமான உண்மைகளைக் கூறுவது மெய்ஞ்ஞானம். அழியக்கூடிய பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்து விளக்கம் தருவது விஞ்ஞானம். மனிதனுக்குப் பதிலாக, எதையும் செய்யக்கூடிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து இயந்திர உலகத்தில் வாழ்பவர்கள் மேலை நாட்டு மக்கள். ஆனால், அமைதிக்காக, மெய்ஞ்ஞானத்தைத் தேடி, நம் நாட்டை நோக்கி வருகிறார்கள். விஞ்ஞானத்தால் கிடைக்காத அமைதி, பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மெய்ஞ்ஞானத்தில் கிடைக்கிறதென்று உணர்கிறார்கள்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...