Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

நெற்றிப்பொட்டின் மகத்துவம்

 

நெற்றிப்பொட்டின் மகத்துவம்

          எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். சிரசில் மிக முக்கியமான நரம்புகள் நெற்றியின் நடு பொட்டில் சந்திக்கின்றன. நமக்கு ஏதாவது மறந்து விட்டால் , அந்த இடத்தை அல்லது இரண்டு ஓரங்களையும் அழுத்தி யோசித்தால் ஞாபகம் வந்துவிடும். இந்த இடத்தை நெற்றிப்பொட்டு என்று கூறுவர். இந்த இடத்தில் பொட்டு வைப்பதால்தான் இதற்குப் பொட்டு என்ற பெயரும் வந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

          நமது சிரசில் நாசிக திருஷ்டி, பூமத்திய திருஷ்டி என்ற மிக வலிமை வாய்ந்த இடம் உள்ளது. எப்படி பூமியில் பூமத்தியரேகை மிக முக்கியமோ, அதுபோல் நமது நெற்றியில் பூமத்திய இடம் என்ற நடுப்பொட்டு மிக முக்கியம். இதுதான் மெஸ்மரிசப்புள்ளி(அரஸ்தானம்). இதைக் கொண்டுதான் பிள்ளைகளை மெஸ்மரிசம் செய்து அழைத்துப் போய் விடுகிறார்கள். நாம் அந்த இடத்தில் பொட்டு வைத்துக் கொண்டால் நம்மை மெஸ்மரிசம் செய்ய முடியாது. அதனால்தான் ஆண்களும் திருமண், ஸ்ரீசூரணமும் வலிமையையும், உஷ்ணம் அதிகம் உள்ள அந்த இடத்திற்குக் குளிர்ச்சியையும் கொடுக்கிறது.

          சிறு குழந்தைகளுக்கு  ஜவ்வரிசியில் சாந்து செய்து பொட்டாக வைப்பர். இது குளிர்ச்சி தருவதுடன், திருஷ்டிபடாது என்பர். அதே போல் கரிசிலாங்கண்ணி இலை கழுவி சாறெடுத்துத் தூய்மையான துணியை அதில் ஊற வைத்து, துணியை உலர்த்தி மீண்டும் பல முறை ஊறவைத்து காயவைத்தத் துணியை த் தடியான திரியாக்கி, பெரிய மண் அகல்விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றித் திரியாக்கி, ஒரு மண் சட்டியைச் சற்று காற்றுப் புகும்படி கவிழ்த்து வைத்தால் கெட்டியான கரும்புகை படியும். இதனைச் சுத்தமான விளக்கெண்ணெயில் குழைத்து, கண்ணுக்கிட்டாலும், பொட்டாக இட்டாலும் மிகவும் குளிர்ச்சியைத் தரும். விளக்கெண்ணெய் குளிர்ச்சியைத் தரவல்லது. குங்குமமும் மஞ்சளால் செய்யப்படுகிறது. இது ஒரு கிரிமி நாசினி. இப்படி எத்தனையோ வகையில் கவசமாகவும், நல்ல ஆரோக்கியத்தையும் முகத்திற்கு அழகையும் தரவல்லது.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...