Skip to main content

வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ. இறையன்பு (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை )   புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு ,   விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96,   விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் .   முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...

இலக்கியத்தில் மரக்கலங்கள்

 

இலக்கியத்தில் மரக்கலங்கள் 

‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்கேற்ப பழந்தமிழர் கடல் வாணிபத்தில் சிறப்புற்றுத் திரவியம் தேடுவதிலும், தம்முடைய நாகரிகத்தினைக் கடல் கடந்து பரப்புவதிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். கடல் கடந்து செல்வதற்கேற்பப் பலவிதமான மரக்கலங்களைக் கட்டுவதில் வல்லவர்களாகவும் கொண்டு வந்த பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கேற்பத் துறைமுகங்களை நிர்மாணிப்பதில் வல்லுநர்களாகவும் திகழ்ந்தனர். மரக்கலங்களை அம்பி, புணை, திமில், கலம், நாவாய், பஃறி  என்று பல வகைகளில் துறைமுகங்களுக்கேற்ப, பயணத்திற்கேற்ப பயன்படுத்தி இருக்கின்றனர்.

அம்பி

          அம்பி என்பது தெப்பம் –தோணி வகையைச் சார்ந்தது.

            ”நல்அரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த

            தூங்கல் அம்பித் தூவல்அம் சேர்ப்பின்”   (நற் . 354:6-7)

கடற்கரைச் சோலையை அடுத்தப் புன்னை மரத்தின் அடியில் அசையும் தோணியினைக் கட்டியிருப்பதை நற்றிணைச் சுட்டுகிறது.

          அம்பி பெரும்பாலும் மீன் பிடிக்கும் தொழிலுக்குப் பயன்பட்டது.

            ”வாள்வாய் சுறவின் பனித்துறை நீந்தி” (அகம்.187:21-23)

போன்ற பாடல்வரிகள் இதனை உறுதி செய்கின்றன. அம்பி என்பது பாய்மரம் இன்றிக் காணப்படும் சிறு தோணியாதலால் கடலில் வெகுதொலைவு பயணிக்க வாய்ப்பில்லை. எனவே இவற்றைப் பெரும்பாலும் ஆற்றிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் மட்டும் மீனவர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு.

திமில்

          ”திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ” (அகம்.388:9-10)

          ”நளிகடல் திரைச்சுரம் உழந்த திண்திமில்” (அகம்.240:3-5)

          ”வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்” (350:11)

எனும் வரிகள் திமில் வகை மரக்கலங்கள் மீன் பிடிக்க மட்டுமன்றி முத்துக் குளிக்கவும் பயன்படுத்தியிருப்பர் என்பதைப் புலப்படுத்துகின்றன. இதனைச் செலுத்துவதற்குச் சிறப்பு வாய்ந்த திமிலர்கள் இருந்துள்ளனர். இவ்வகை மரக்கலங்கள் (தோணி, அம்பி, திமில்) தனித்தனி மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப் பெற்றவையாகும்.

புணை

          தெப்பம் இவை மரத்துண்டுகளைக் கொண்டு கட்டப்பட்ட கட்டுமரம் ஆகும். இது பெரிய கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டதைப் பெரும்பாணாற்றுப்படையும், உயிர் காக்கும் படகாக விளங்கியதைக் கலித்தொகையும் குறிக்கின்றன.

வங்கம், நாவாய்

   வங்கம், நாவாய் ஆகியவை பாய்மரங்கள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்களாகத் திகழ்ந்துள்ளன. அருமையான பொருள்களைக் கொண்டு வருவதற்காகப் பெரிய ஒலி செய்யும் வங்கங்கள் (பதிற்52:4) பல திசைகளில் சென்றன என்பதையும் வங்கம் பேரொலி செய்யும் என்றும், நீர்வழிப் பொருள்களை எடுத்துச் செல்லப் பயன்பட்டது என்றும் அறியலாம். பன்னாட்டுக் கடல் பயணத்தில் பயன்படுத்த மரக்கலங்களில் கலமும், நாவாயும் முதல் இடத்தை வகிக்கின்றன.

          இவை பல பாய்மரங்களையும், கொடிகளையும் (தூங்கு நாவாய் துவன்று இருக்கை, மிசை கூம்பின் நசைக் கொடியும்.... பட்.174-175) கொண்டு விளங்கியதையும், ஒரு துறைமுகப் பட்டினத்திலிருந்து மற்றொரு துறைமுகப்பட்டினத்திற்குச் சென்று வந்தமைக்கான குறிப்பினைக் கொண்டும் தமிழர்கள் உருவாக்கிய மரங்கலங்களுள் இவையே சிறப்பு வாய்ந்தவை எனலாம்.

பஃறி

       பெரிய அளவிலான படகு வெள்ளை உப்பின் விலையைக் கூறி விற்றுப் பதிலாக நெல்லோடு வந்த பெரிய படகுகளை, குதிரைகளை வரிசையாகக் கட்டி வைப்பதைப் போல முளைகளிலே பிணித்து வைத்திருப்பதைப் பட்டினப்பாலை -30 மூலம் அறியலாம்.

நிறைவாக,

கி.மு 5 - ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய கப்பல்களைக் கட்டக்கூடிய ஆற்றலையும், நுண்ணறிவையும் தமிழர் பெற்றிருந்தனர். இக்கப்பல்கள் ஒவ்வொன்றும் 33 டன் எடைச் சரக்குகளை ஏற்றிச் செல்லக் கூடியவை. பிற்காலத்தில் சோழர் மன்னர்கள் காலத்தில் இவற்றைவிட பெரிய கலங்கள் கட்டப் பெற்றன.  சோழமண்டல கடற்கரையில் புதுவை, மரக்காணம், முதலிய துறைமுகங்களில் மாபெரும் கப்பல்களும், பெரிய கட்டுமரங்களும் வந்து தங்குவதுண்டு. இவ்விடங்களில் இருந்தும் நாவாய்கள் கரையோரமாகவே பாய் விரித்தோடிச் சேரநாட்டுத் துறைமுகங்கள் அடைவதுண்டு. இவ்வாறு பல வகையான கலங்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு யவன ஆசிரியர் குறிப்புகளும் சான்று பகர்கின்றன.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...