Skip to main content

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

தமிழர்களின் வெறியாடல் வழிபாடு

 

தமிழர்களின் வெறியாடல் வழிபாடு

      சங்கமக்கள் பலி கொடுத்துசெய்த வழிபாட்டின் வளர்ச்சியே வெறியாட்டாகும். இது சங்கமக்களின்  அகவாழ்வில் மிக இன்றயமையாத் திருப்புமுனையாகும். களவொழுக்கத்தில் இடம் பெண்ணின் (தலைவியின்) உடலிலும் செயலிலும் மாற்றங்கள் ஏற்பட அவளுடைய நோயின் காரணத்தை அறிய அன்னையர் நிகழ்த்தவதே வெறியாட்டு வழிபாடாகும். இது முருகனுக்குரிய வழிபாடாகும். முருகன் வேலன் என்னும் பூசாரி வடிவில் வெளிப்படுவான் என்ற நம்பிக்கையே இதற்கு அடிப்படையாகும். பிற்கால இலக்கியங்களில் இடம் பெறக்கூடிய தெய்வமேறல் போன்றவற்றிற்கு இதுவே தோற்றுவாயாகும்.

          வேலன்  தலைவியின் மெலிவிற்கு முருகனே காரணம் என்பான். எனவே வேலன் வழியே முருகனை அழைத்தப் பலிக்கொடுத்து வணங்கி தலைவியின் நோய்தீர நிகழ்த்தப்பட்டதே வெறியாட்டாகும். இதற்கு இடவரையறையும் உண்டு. நள்ளிரவு நேரம் இதற்குரிய நேரமாகக் கருதப்பட்டது. வீட்டில் நல்லதோர் இடத்தில் தினையையும் பலியிடப்பட்ட விலங்கின் இரத்தத்தையும் கலந்து தூவி, வேலனை அழைத்து வெறியாடல் நிகழ்த்தப்பட்டு இதில், அவனது உணர்வுகளை மிகுவிக்கும் வகையில் இசைக்கருவிகள் முழங்கப்பட்டன. இதற்குச் சான்றாக அகநானூற்றிலிருந்து,

          ”களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி

           வளநகர் சிலம்பப் பாடி பலிக் கொடுத்

           துருவச் செந்தினை குருதியொடு தூஉய்

           முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்”

என்பதாகும். இவ்வாறு சங்கமக்கள் செய்த வழிப்பாட்டிலிருந்து பின்வரும் செய்திகள் பெறப்படுகின்றன. அவை,

·        இயற்கையோடு இணைந்து வாழ்ந்த சங்கமக்கள் இயற்கைக் கூறுகளான, ஒளி, நிலம், கடல, காடு, மலை போன்றவற்றையும் வழிபடுப் பொருள்களாகக் கொண்டிருந்தனர்.

·        இயற்கையைப் பல்வேறு உருவில் வழிப்பட்டனர்.

·        மாயோன்,சேயோன் என்றும் கடவுளுக்குப் பெயரிட்டு வணங்கினர்.

·        புராணங்களைப் பற்றிய நம்பிக்கைகள், சங்க காலத்தில் இருந்தன. அதற்கு அடையாளம் சிவனுக்கு அவர்கள் வழங்கிய பெயர்கள்.

·        கூட்டு வழிபாட்டு முறையைப் பின்பற்றினர்.

·        நல்லக் கணவனை அடைவதற்கு விலங்குகளின் எச்சில் உண்ணுதலையும் வழிபாடாய்க் கொண்டிருந்தனர்.

·        பலிக்கொடுத்தும் வெறியாட்டயர்ந்தும் கடவுளை வணங்கினர்.

நிறைவாக,

          சங்க மக்களின் வாழ்க்கை முறை வழிபாட்டில் எதிரொலித்தது. இதற்கு, பலி கொடுத்து கடவுளை வணங்கியது சான்றாகும். அதாவது இனக்குழு மக்களின முக்கியத்தொழில் வேட்டையாடுதல், எனவே அத்தாக்கத்தால் தோன்றியதே பலிக்கொடுத்துக் கடவுளை வணங்கியதாகும். வெறியாட்டிலும் அத்தன்மை வெளிப்படுகிறது.

தலைவியின் மெலிவிற்கு முருகனே காரணம் என அஞ்சி வெறியாடு அயர்ந்தனர். இதில் தினையோடு பலியிட்ட விலங்கின் குருதியைக் கலந்து வழிபாடு செய்தனர். அதன் மூலம் தலைவியின் நோயைத் தீரக்கமுடியும் என நம்பினர். முருகனாகிய தொய்வம் வேலனாகிய பூசாரி வழி வெளிப்படும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட இவ்வெறியாடலே பிற்கால சிலம்பு முதலான இலக்கியங்களில் இடம்பெற்ற தேய்வமேறல் என்பதற்குத் தோற்றுவாயாகும்.

         

       

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...