Skip to main content

வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ. இறையன்பு (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை )   புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு ,   விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96,   விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் .   முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...

காலை உணவின் முக்கியத்துவம்

 

காலை உணவின் முக்கியத்துவம்

 

        நமது நாட்டில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள், என உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத இயற்கைவளங்கள் நிறைந்த கிடைத்தற்கரிய மாபெரும் பொக்கிஷமாகும். அவை மட்டுமல்லாது சமையல் கலையிலும், அறுசுவையிலும், விருந்தோம்பல் முறையிலும் நம் நாட்டிற்கு இணை நம்நாடே எனலாம். இத்தகைய வளங்கள் நிறைந்த நாட்டில் மக்கள் நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு மிக அதிகளவில் இருப்பது வருத்தற்குரியது.

காலை உணவின் முக்கியத்துவம்

   ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என ஆன்றோர் பெருமக்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடல் நலம் காக்கும் காலை உணவின் முக்கியத்துவத்தை அறியலாம். நாம் இந்த இயந்திர உலகில் வேலைப்பளுவின் காரணமாகவும், உடல் பருமனை, எடையைக் குறைக்கவும், விரதங்கள் என்று பலக் காரணங்களால் நம்மில் பலர் காலை உணவை உண்பதில்லை. இதன் விபரீதங்கள் நாம் அறியவில்லை.

       நாம் இரவில் சீக்கிரம் சாப்பிடுவது நன்மை தரும். ஆனால் நகர வாழ்க்கையில், இரவில் பணியின் காரணமாகவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலையிலும், அவரவர் தனிப்பட்ட வேலைகளை இரவில்தான் செய்கிறார்கள். இதனால் சாப்பிடும் நேரம், உறங்கும் நேரம் மாறி உடலை வீணாக்கிக் கொள்கிறார்கள். இரவு 9 மணிக்குச் சாப்பிட்டால் மறுநாள் காலை 9 மணிக்குதான் உண்கிறார்கள். ஆக 12 மணிநேரம் வயிறு காலியாக இருந்தால் ஏற்படும் விபரீதத்தை யோசித்துப் பார்ப்பதில்லை.

          வயிற்றில் உணவு இருக்கிறதோ இல்லையோ, அது அதன் வேலையைச் செய்து கொண்டேயிருக்கும். ஒரு வினாடி கூட ஓய்வெடுக்காத இயந்திரம் நமது உடல். உணவின் செரிமானத்திற்குத் தேவையான அமில நீரை வயிற்றில் சுரந்து கொண்டேயிருக்கும். வயிற்றில் உணவு இல்லாத போதும், இந்த அமிலம் வயிற்றின் மேல் படிவத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக அரித்து வரும். இதனால் acidity, ulcer போன்ற தொல்லைகள் உண்டாகி, இதனால் வயிற்றில் எரிச்சல், வலி என ஏற்பட்டு நாளடைவில் Peptic Ulcer ஆகி, பெரிய பிரச்சனையை உருவாக்கி விடும். ஆகவே காலை உணவைத் தவிர்ப்பது நமக்கு நாமே நோய் என்னும் வேண்டாத விருந்தாளியை வரவேற்பதாகும்.

          காலை உணவு மற்ற இரு வேளை உணவுகளை விட அதிகமாக உண்ண வேண்டும். மற்ற இரு வேளைகளிலும் குறைவாக உண்ணுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

          காலை வேளை உண்பதால் மூளை தாக்குதல், மாரடைப்பு, திடீர் இறப்பு தடுக்கப்படுகிறது. இம்மூன்றும் தாக்கும் நேரம் காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை என ஆய்வில் கணித்துள்ளார்கள். காலையில் கொழுப்பு குறைந்த உணவுகள் அல்லது கொழுப்பில்லாத தயிர், பழங்கள், ஆரஞ்சு, திராட்சைப் பழரசம், நமது இட்லி சாம்பார் போன்ற உணவினை உண்பது நல்லது. ஆகவே காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

              ”மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

               வளிமுதலா எண்ணிய மூன்று”  (குறள் – 941)

    என்ற திருவள்ளுவரின் கூற்றிற்கிணங்க அளவை மிஞ்சும் போதும் ஆபத்துதான். அதுபோல அளவில் குறையும்போதும் ஆபத்துதான். ஆக மனிதன் உயிர் வாழ, உயிரைத் தாங்கும் உடல் சிறப்பாகச் செயல்பட, பழுதில்லாது பயன்படத் தேவை உணவு.

         

 

         

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...