Skip to main content

விநாயகரின் அறுகம்புல் - வரலாறு

 

விநாயகரின் அறுகம்புல் -வரலாறு

          தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி, அவர்களின் இறைத்தேடுதலுக்கு முட்டுக்கட்டையாய் நின்று வன்மை புரிந்தான் அனலாசுரன். தேவர்களின் நலம் காக்கும் பொருட்டு, அனலாசுரனை விநாயகர் விழுங்கினார். அப்போது விநாயகருக்கு ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க, முனிவர்கள் அறுபம்புல்லைக் கொண்டு வந்து விநாயகருக்குச் சாற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனால் விநாயகரின் வெப்பம் நீங்கியதாய் விநாயகப் புராணம் கூறுகிறது.

  விநாயகருக்கு உகந்த மூலிகைகளாக, எருக்கம்பூ, செம்பருத்திப்பூ, அறுகம்புல் ஆகியவற்றை தமிழ்மரபு முன்நிறுத்தியது.

         மேலும், மாவிலை, வில்வ இலை, மாதுளம் இலை, தங்க அரளி இலை இவற்றாலும் விநாயகரைப் பூஜித்து வழிபடலாம். ஆனால் விநாயகர் சதுர்த்தியன்று துளசி இலைகளால் மட்டும் பூஜிப்பது கூடாது.

அறுகம்புல்லின் மருத்துவ குணங்கள்

·     துவர்ப்புத் தன்மை கொண்டுள்ளதால், உடலைப் பேணி வளர்க்கும் தன்மை கொண்டது.

·        இயல்பாகவே சிறுநீர் பெருக்கும் தன்மை கொண்டது.

·        காயம்பட்ட இடத்தில் உண்டாகும் இரத்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டது.

·        சொறி, சிறங்கு, படர்தாமரை போன்ற குறைகளை வேரறுப்பதில் அறுகம்புல்லுக்கு நிகர் எதுவுமில்லை.

·        வயிற்றுப்பூச்சிகள், கிருமிக்கோளாறுகள் தீர்ப்பதில் இதுவே முன்னோடி எனலாம்.

         அறுகம்புல்லில் தீராத வியாதி ஏதுவுமில்லை என்றே சொல்லலாம். இது சர்வரோக நிவாரணி. தெய்வ வழிபாடுகள் நம் வாழ்வியலுக்கான வழிகாட்டி எனலாம்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...