Skip to main content

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

நளாயிணி

 

நளாயிணி 

          திரௌபதி மணத்திற்காக சுயம்வரம் நடந்தது. அங்குக் கூடிய மன்னவர்கள் வானில் திரியும் எரி பன்றியை வீழ்த்தும் வகையறியாது வாடினர். அதனை விசயன் வீழ்த்தினான். பாஞ்சாலியின் தந்தை துருபதன். பாண்டவரைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். ஐவரும் பாஞ்சாலியை மனைவியாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டுத் திகைத்தான் துருபதன். பாஞ்சாலன் அவைக்கு வந்த வியாச முனிவன் துருபதன் திகைப்பைப் போக்கும் பொருட்டு நளாயிணி வரலாற்றைக் கூறினான்.

          கனவில் தோன்றி காரிகையாம் பாஞ்சாலி பழம் பிறப்பில் நளாயணி என்னும் பெயருடன் விளங்கினாள். மௌத்கல்யன் அவள் கணவனாக விளங்கினான். மௌத்கல்யன் தன் மனைவியின் கற்பின் உறுதியைச் சோதித்து அறிய விரும்பினான். கிழவனாகவும், கொடிய தொழு நோயனாகவும் தன்னைக் காட்டிக் கொண்டு நளாயிணியைத் துன்பம் செய்தான். கற்பில் வழாத அப்பெண் எல்லாத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டாள். கணவன் உண்டபின் எஞ்சிய சோற்றில் அவன் விரல் அழுகி விழவும் அருவருப்புக் கொள்ளாது உண்பாள் அவள். கொடும் காம நோய் கொண்டு தான் விரும்பிய இன்பம் அடையப் பெறாது துன்பம் அடைந்தாள். நளாயிணியின் பொறுமை கண்டு மௌத்கல்யன் அவளைப் பாராட்டினான். ‘வடமீனும் உனக்கு நிகராக மாட்டாள், நீ வேண்டும் வரம் கேட்டுப் பெறுகஎன்றான்.

          கணவன் சொற்கேட்ட நளாயணி, நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்று வேண்டினாள். அவள் விரும்பிய வரம் அளிக்கப்பட்டது. இருவரும் பற்பல காலம் பல்வேறு வடிவங்களில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்தார். இறக்கும் காலத்தும் மீண்டும் மௌத்கல்யனே தன் கணவனாக வாய்க்க வேண்டும் என்று விரும்பினாள். இறந்த பிறப்பில் இந்திரசேனை என்னும் பெயருடன் அவனை அடைந்தாள், அவனோ இல்லற வாழ்க்கையை வெறுத்துத் துறவறத்தில் நாட்டம் கொண்டான். தன் எண்ணம் முற்றுப் பெற இந்திரசேனையை விட்டுப் பிரிய உறுதி செய்தான். அறிந்த அவள் செய்வகையறியாது திகைத்தாள்.

 உமையொரு பாகனை நோக்கித் தவம் செய்யுமாறு மனைவியைப் பணித்துவிட்டு அகன்றான். அவளும் அவ்வாறே தவம் செய்தாள். (யாகசேனன்துருபதன் மகளாகப் பிறந்து ஐவரை மணப்பாய் என்று மௌத்கல்யன் சபித்த பின் சிவனை நோக்கி தவம் செய்ததாக முதல் நூல் கூறும்) தவம் செய்த தையல் முன் சிவன் தோன்றினான். ‘கணவன் தருகஎன்று ஐந்து முறை கூறியதால் ஐவரை மணந்து இன்பம் பெறுமாறு அருளினான் அரி.

          சிவனுடைய மொழியறிந்து கங்கையில் மூழ்கி தன்னந்தனியாக நின்று அழுதனள். கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த காரிகை முன் வாசவன் வந்தான். கண்ணீருக்குரிய காரணம் யாதென வினவிக் கொண்டு அவளைக் நெருங்கினான். வந்தவனை முன் தொடர்பால் வருக என்றனள். இந்திரன் சிவனை மதியாது சென்றதால் சிவன் சினந்தான். புவனத்து எவரும் நகையாட இந்திரன் புலம்பி வீழ்ந்தான். விழுந்த வாசவனுக்கு ஒரு குகையுள் அடைப்பட்டிருந்த நாலு இந்திரர்களைக் காட்டினான்.

 ஐவரும் இவளுக்கு கணவன் ஆவர் என்றான் உமையொரு பாகன். அவ்வைவரே பூமியில் பாண்டவராய்த் தோன்றினர். தருமன், வீமன், நகல, சகாதேவர் நால்வரும் பிலத்தில் அடைபட்டிருந்த இந்திரர் நால்வராவர். நெற்றிக் கண்ணனின் சினத்திற்கு ஆளான இந்திரன் அருச்சுனன் ஆவான். அருமா தவத்தின் எல்லை கண்ட இந்திரசேனை – பாண்டவர் ஐவரையும் மணப்பதில் பிழையில்லை என்று கூறி முடித்தான் வியாசன்.

 

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...