Skip to main content

மலர்களினால் பெயர் பெற்ற தலப்பெயர்கள்

 

மலர்களினால் பெயர் பெற்ற தலப்பெயர்கள்

          மலர்களின் சிறப்பினாலும் தலங்கள் பெயர் பெறுகின்றன. வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் மலர்கள் தொடர்பாகப் புராணங்கள் பலகதைகளைத் தருகின்றன. இறைவனின் பூசைக்கென்றே தனியாகத் தாமரைக் குளங்கள் பராமரிக்கப்பெற்றன. அவைகளும் மலர்களின் சிறப்பினால் பெயர் பெற்றிருக்கக் கூடும்.

நீலோற்பலம்

          தணிகையில் மலரும் நீலோற்பல மலரைக் கொண்டு அத்தலத்தில் தேவர்களும் முனிவர்களும் வழிபாடியற்றினர், எனத் தணிகைப் புராணம் குறிப்பிடுகிறது. நாள்தோறும் இறைவனுக்கென்று மலரும் நீலோற்பல மலரின் பெருமைக் குறித்து அத்தலம் காவித்தடவரை, நிலவரை, நீலவிலங்கல், அல்லகாத்திரி, உற்பலவரை, காவியத்திரி, குவளைக்கிரி, காவியங்கிரி என்ற பெயர்களைப் பெற்றதாகத் தணிகைப்புராணம் பாடுகிறது.

செவ்வந்திப்பூ

          சரபமுனிவர் தாயுமானவரைச் செவ்வந்திப் போதினால் வழிபட்டமையால் அத்தலம் செவ்வந்திபுரம் என்றாயிற்று எனச் செவ்வந்திப் புராணம் விவரிக்கின்றது.

முல்லை

          முல்லைக்கொடியின் மறைவினின்று இறைவன் வெளிப்பட்டமையால் திருமுல்லைவாயில் எனும் தலம் பெயர் பெற்றதோடு முல்லைக்கொடியே தலமரமாகவும் வணங்கப் பெறுகிறது. இறைவனும் முல்லைவனநாதர் எனும் பெயர் பெற்றுள்ளமையும் நினையத் தகும்.

பூளை, எருக்கு

          பூளைச்செடியைத் தலத்திற்குரியதாகப் பெற்றுள்ள தலம் திருஇரும்பூளை எனும் தலமாகும். எருக்கம்பூவினையும் எருக்கஞ்செடியையும் சிறப்பாகப் பெற்றுள்ள தலம் திருஎருக்கத்தம்புலியூர் ஆகும்.

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...