Skip to main content

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

குந்தி தேவி

 

குந்தி தேவி 

        சூரன் என்பவன் யது குலத்தில் தோன்றியவன். அவன் மகள் பிரதை என்னும் பெயரினள். சூரனுடைய அத்தை மகன் குந்திபோசன். குந்திபோசனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, சூரன் தன் மகள் பிரதையைக் குந்திபோசனுக்கு அளித்தான். குந்திபோசனிடம் வளர்ந்து வந்த்தால் பிரதைக் குந்தி என்று அழைக்கப்பட்டாள்.

          ஒருநாள் துருவாச முனிவன் குந்தி போசனைக் காண வந்தான். கழங்கு, அம்மானை, ஆடல், ஊசல் முதலிய விளையாட்டுக்களைத் துறந்தும் தன் தோழியரை மறந்தும் குந்தி, வந்த முனிவனுக்குச் சிறு குறையுமின்றிப் பணிவிடை செய்து வந்தாள். தன் அறிவுத்திறனால் முனிவன் முனியாது யாவற்றையும் செவ்வனே செய்து வந்ததைக் கண்டு  முனிவன் மகிழ்ச்சியடைந்தான். துருவாசன் தனக்குப் பணிசெய்த குந்திக்கு அரியதொரு வரம் அருளினான். ”தெரிவை கேள் எனச் செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரைக் கருதி நீ வரவழைத்தனை அவரவர் நின் கரம் சேர்வர். தம்மை ஒப்பதோர் மகவையும் தருகுவர்” என்று மறையவன் மந்திரம் சொன்னான்.

          முனிவன் விடைபெற்றுச் சென்றபின் தன் செல்வமனையை அடைந்தாள். முனிவன் அருளிய மந்திரத்தின் உண்மையைக் காண அவள் உள்ளம் விரும்பியது. நிலா முற்றம் அடைந்தாள். சூரியனை மனத்தில் எண்ணி மந்திரத்தை ஓதினாள். அக்கணமே காய்கதிர்ச் செல்வனும் அவள் முன் தோன்றினான். கன்னியாகிய தன்னை அணைக்க வந்த அருணனைக் கண்டு அஞ்சினாள். அவள் அச்சத்தை நீக்கியதுடன் மீண்டும் கன்னியாகும் வரமும் தந்தான் சூரியன். பின் அவன் குந்தியைக் கூடினான். ஆயிரம் கரத்தோன் அணைப்பில் இன்பம் பெற்றாள் குந்தி. அருணன் அவளிடம் விடைபெற்றப்பின் பிரிந்தான். நடந்தவெல்லாம் கனவு என்னுமாறு நடந்து முடிந்ததைக் கண்டாள் கன்னியாம் குந்தி. அவள் கருக்கொண்டாள்.

          குந்தி ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். இந்திரன் முதலிய தேவர்களும் இரந்ததைக் கொடுக்கவல்ல மாமகனை ஈன்றாள். மாமணி கவச கண்டலத்துடன் குழந்தை பிறந்தது. அருணன் அருளிய வரத்தால் மீண்டும் குந்தி கன்னியானாள். பழிக்கு அஞ்சிய குந்தி குழந்தையைப் பேழை ஒன்றில் வைத்து ஆற்றில் செல்லவிட்டாள். கங்கை பேழையையும் அதனுள்ளிருந்த குழந்தையையும் தன் அலையாகிய கைகளால் தழுவி எடுத்துத் தேர்ப்பாகன் ஒருவனிடம் சேர்த்தது. அம்மகவை எடுத்தவன் அதிரதன் என்பவன். அதிரதன் மனைவி இராதை. இருவரும் அம்மகவைப் பேணி வளர்த்தனர். அவனுக்குப் படைக்கலப் பயிற்சி யாவும் அளித்தார். படைப்பயிற்சியில் தேர்ந்தான். பரசுராமனிடம் வில்வித்தை கற்றான். துரியோதனனுக்குத் தக்க நண்பனாவான். துரியோதனன் தயவால் அங்க நாட்டிற்கு அதிபதியானான். அவனே கன்னன்.

          குந்தி கன்னியாக மாறிய பின் குருகுலத்தரசன் பாண்டுவை மணந்தாள். பாண்டு பெற்ற சாபத்தின் விளைவால் பாண்டுவிற்குக் குந்தி வயிற்றில் குழந்தைகள் பிறக்கவில்லை. துருவாச முனிவன் அருளிய வரத்தால் எமன், வாயு, இந்திரன் ஆகிய தேவர்களைக் கூடி முறையே தருமன், வீமன், விசயன் ஆகிய மூன்று மக்களைப் பெற்றாள். பாண்டுவின் மற்றொரு மனைவி மாத்திரி. மாத்தரிக்கும் மந்திரத்தைக் கூறினாள் குந்தி. அதன் பயனாக மாத்திரி வயிற்றில் நகுலனும் சகாதேவனும் தோன்றினர். அசுவினி தேவர்க்கு மாத்திரியிடம் இருவரும் பிறந்தனர்.

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...