Skip to main content

சிசுபாலன்

 

சிசுபாலன் 

        ஐவகை வடிவாய் எங்குமாய் நின்ற பங்கயக் கண்ணன் திருமாலைக் காண துருவாச முனிவர் வைகுந்தம் சென்றான். சென்றவனைக் கோயில் வாயில் காப்போரான துவார பாலகர் தடுத்து நிறுத்தினர். தன்னை விலக்கிய அவர்களை நோக்கி, கோயில் வாயில் காவல் ஒழிந்து பூமியில் பிறப்பீராக என்று சாபமிட்டான். துளப மாலையான் முனிவனை எதிர்கொண்டு, துவார பாலகர் சாபம் கடப்பது எந்நாள் என்று கேட்டான். கேட்ட திருமாலுக்கு முனிவன், உன் அன்பராய் எழுமுறை பிறந்து வருதல் அல்லது உன் பகைவராய் மும்முறை தோன்றுதல் ஆகிய இவற்றுள் ஒரு வகையால் சாபம் தீரும் என்றான். உடனே திருமால் துவார பாலகரை நோக்கி, எவ்வழியில் நும் சாபம் கடக்க விரும்புகின்றீர் என வினவினார். துவாரபாலகர் திருமால் திருவடியைத் தொழுது, வான்பிறப்பு ஏழை வேண்டோம். உனக்கு வெம்பகையாய் மும்முறை தோன்றி எம் சாபம் நீங்க விரும்புகின்றோம். திருமால் அவர்கள் வேண்டிய வரம் அருளினான்.

          துவாரபாலகர் முதலில் இரணியன், இரணியாக்கதன் என்ற பெயருடன் தோன்றி உலகில் கொடுமை பல செய்து வருங்கால், திருமால் நரசிங்கமாய்த் தோன்றி இரணியனையும், வராகமாய்த் தோன்றி இரணியாக்கத்தனையும் அழித்தான். இருவரும் இரண்டாம் முறையாக இராவணனும் கும்பகருணனுமாகப் பிறந்தார். திருமால் தசரதமனாகத் தோன்றி அவதாரமான கண்ணனுக்கு உறவினராய்த் தோன்றினர். மாமனாகவும், அத்தை மகனாகவும் பிறந்தார். மாமன் கம்சன் அத்தை மகன் சிசுபாலன். கம்சன் சிசுபாலன் இருவரும் கொடுமை பல செய்து வந்தனர். கம்சனை ஒழித்தான் கண்ணன்.

          பாண்டவர் நடாத்தும் இராசசூய யாகத்திற்கு வந்தான் சிசுபாலன். அவன் சேதி நாட்டை ஆண்டு வந்தான். அகர பூசனைக்குக் கண்ணன் உரியவன் என்று வியாச முனிவன் கூறியதைக் கேட்டு சிசுபாலன் வெகுண்டான். கண்ணனைப் பலவாறு பழித்துரைத்தான். அதனைக் கேட்டு வெகுண்ட கண்ணன் அவனைப் போருக்கு அழைத்தான். நடந்த போரில் கண்ணன் திகிரிப் படையால் சிசுபாலன் அழிந்தான்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...