Skip to main content

பண்டைத் தமிழர்களின் வழிபாட்டு வகைகளும் – உணவு முறைகளும்

 

பண்டைத் தமிழர்களின்

 வழிபாட்டு வகைகளும் – உணவு முறைகளும்

 

        பண்டைத் தமிழர்களின் தொல் சமயம் பல்வேறு வகைகளாக இருந்துள்ளன. ஆவி வழிபாடு, உயிரிப்பாற்றல் வழிபாடு(animatism), கானுறை தெய்வங்கள், மலையுறை தெய்வங்கள், நீருறை தெய்வங்கள், மரத்தில் உறையும் தெய்வங்கள், கந்து ஆகியவற்றின் வழிபாடு, இயற்கை வழிபாடு, எனத் தொல் தமிழரின் வழிபாட்டு முறைகள் பன்முக நிலையில் பரிணமித்துள்ளன. இவற்றோடு பழையோள், காடமர் செல்வி, காடுகிழாள், கொற்றவை என விரிந்தன.

பின்னர் நிறுவனச் சமயங்களாக வடிவம் பெற்றன. ஆசீவகம், சாக்தம், கௌமாரம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் எனத் தமிழர்களின் சமய வாழ்வு தொடர்ந்து மாறி வந்துள்ளது. இதில் தொடர்ச்சியையும் மாற்றத்தையும் காண முடிகிறது. சமயத்தின் செல்வாக்கினை உணவு உள்ளிட்ட பண்பாட்டின் மற்ற கூறுகளில் காண முடிகிறது. ஆக, தமிழர்களின் உணவு முறையானது அதன் நீண்ட நெடிய சமய வரலாற்றைப் போன்றே ஒரு தொடர்ச்சியான மரபைக் கொண்டிருக்கிறது.

உணவு முறைகள்

        பண்டைத் தமிழர்கள் உணவைப் பல பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். உணா, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பதம், இரை, ஆகாரம், உறை, ஊட்டம் எனப் பத்தும் உணவின் பிற பெயர்களாகப் பிங்கலந்தை கூறுகிறது. இவையின்றி விழாக்களின்போதும் விசேட நாட்களின் போதும் பலவகையான பதார்த்தங்களோடு செய்யப்படும் ‘பேருண்டி’ என்பதும் வழக்கிலிருந்துள்ளது. மேலும், கொண்டி, புகா, மிசை எனும் பெயர்களாலும் உணவு சுட்டப் பெற்றுள்ளது. இதன்மூலம் உணவென்பது பசியாறுவதற்கான உயிரியல் கூறாக அல்லாமல், சமூக வினையாற்றலுக்கு உரியதாகப் பரிணமித்துவிட்டதைக் காணலாம்.

          சமைத்தல் – உண்ணுதல், சைவம் – வைணவம், சாதாரண உணவு – விருந்து உணவு, விருப்பம் – விலக்கு, புனிதமானது – புனிதமற்றது, என்பன போன்ற எண்ணற்ற கூறுகள் உணவு முறையின் உலகளாவிய பண்புகளாக இருப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு சமூகத்தின் உணவுமுறையானது பொதுத் தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதனதன் தனித்துவத்தைக் காலங்காலமாக நிலைநிறுத்தியும் வந்துள்ளது. தமிழ்ச் சமூகம் போன்ற நீண்ட நெடிய பழமைச் சமூகங்களில் உணவு வரலாறும், உணவுப் பண்பாடும் தனித்துவமான மரபுடையது.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...