Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

கிரகணங்கள்

 

கிரகணங்கள்

 

        கிரகணம் என்ற சொல்லுக்குப் பிடீத்தல், பிடித்தல், பற்றிக் கொள்ளுதல் என்றெல்லாம் தமிழகராதி கூறுகிறது. சோதிடச் சாத்திரத்தில் சூரிய கிரகணத்திற்காகக் கோள்நிலைகள் பற்றி பெரும்பான்மையானச் சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன. இக்கிரகணம் குறித்து வானியல்களும் துல்லியமாகக் கூறுகின்றன. வானியல் துறை மற்றும் சோதிடத்துறைகளில் இந்நிகழ்வுக்கானக் கணிதங்கள் உள்ளன. இக்கிரகணம் கற்பனையான ஒன்றல்ல. முற்றிலும் அறிவியல் ரீதியானது. வானியலார் இக்கிரகணத்தை சோலார் எக்கிளிபிடிக்ஸ் என்றும் லூனார் எக்கிளிபிடிக்ஸ் என்றும் இரண்டு வகையாக நெறிப்படுத்தியுள்ளனர். சோதிட நூல்களும் சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

          பூமி, சூரியனை ஆதாரமாகக் கொண்டுச் சுற்றி வருகின்றது. இப்பூமியின் துணைக்கோள் சந்திரனாகும். எல்லா துணைக் கோள்களும் தனது தாய்க்கோளினை சுற்றி வருகின்றன என்பது வானியல் உண்மையாகும். எனவே சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வரும்போது சந்திரனும் சூரியனைச் சுற்றி வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் தத்தமக்கென்றுள்ளச் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. இச்சுழற்சியின் பௌதீக நிகழ்வாக இராசி மண்டலத்தில் சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது ஒரு கோளின் நிழல் மற்றொரு கோளின் மேல் படுவதனால் கோள்கள் மறைக்கப்படுகின்றன.

        பூமியிலிருந்து நோக்கும்போது ஒளிமறைவு ஏற்படுகின்றது. இந்த ஒளிமறைவு அதிகமாவதும் குறைவதுமான நிகழ்வே கிரகணங்களாகும். இந்நிகழ்வுகள் பாம்பு கோள்களைப் பிடிப்பதாகவும் பிடித்த்தை விடுவிப்பதாகவும் தற்குறிப்பில் கூறப்பட்டுள்ளன. இந்தக் கிரகணஙகள் குறித்து சங்கப் புலவர்கள் தெளிவான அறிவைப் பெற்றுள்ளனர் என்பது அவர்தம் பாடல்களால் அறியமுடிகிறது.

சூரிய கிரகணம்

    இராசி மண்டலத்தின் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஓரே நேர்க்கோட்டில் வரும்பொழுது அதாவது சூரியன் சந்திரனுக்கு இடையே ஓரே நேர்க்கோட்டில் பூமி சஞ்சரிக்கும்போது, சூரியனுக்கும் பூமிக்கிடையே சந்திரன் வரும்பொழுது சூரிய ஒளி சந்திரனால் மறைக்கப்பட்டு பூமியிலுள்ளவர்களுக்குச் சூரியன் புலப்படுவதில்லை.  அதனால் பூமியில் உள்ளவர்களுக்குப் பகலிலேயே இருள் சூழ்ந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இந்நிகழ்வே சூரியகிரகணம் எனப்படுகின்றது. இந்த சோதிடக் கூறினைக் குறித்துச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.

சந்திர கிரகணம்

   இராசி மண்டலத்தில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது அதாவது சூரியன் சந்திரனுக்கு இடையே ஒரே நேர்க்கோட்டில் பூமிச் சஞ்சரிக்கும்போது சூரியனுடைய ஒளி பூமியினால் மறைக்கப்பட்டு சந்திரனுக்கு சூரிய ஒளி கிடைக்காத நிலை ஏற்படுகின்றது. இந்நிகழ்வுச் சிறிது சிறிதாகக் காலளவில் அஃதாவது நாழிகை கடிகை முறையில் நடைபெறுகின்றது. எந்தப் பொருள் மேல் ஒளிப்படுகின்றதோ அந்தப் பொருள்கள் பூமியிலுள்ளவர்கள் கண்களுக்குப் புலப்படும்.

       ஒளிப்படாதப் பகுதி நம் கண்களுக்குப் புலப்படாது. இஃது பௌதீக உண்மை. இதன்படி சந்திரனுக்குச் சூரியஒளி முற்றிலும் மறைக்கப்படும் போது பூமியிலுள்ளவர்கள் விழிகளுக்குச் சந்திரனும் தெரிவதில்லை. இதுவே சந்திர கிரகணம் எனப்படும்.

  நற்றிணை குறிஞ்சித்திணைப் பாடலில் நற்சேத்தனார் என்ற புலவர் சந்திரகிரகணம் குறித்தச் சோதிடக்கூறினை,

                   ”பகல்எரி சுடரின் மேனி சாயவும்

                    பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி சுரப்பவும்”

இப்பாடலில் பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி சுரப்பவும் என்றும், மேலும் குறுந்தொகை பாலைத்திணைப் பாடலில்,

                   ”அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போல

                    களையார் ஆயினும்”

என்ற சொற்றொடரில் சந்திர கிரகணம் பற்றிக் கூறியுள்ளமை கருதத்தக்கதாகும்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...