Skip to main content

வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ. இறையன்பு (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை )   புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு ,   விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96,   விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் .   முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...

இலக்கியங்களில் - பசலை நோய்

 

இலக்கியங்களில் - பசலை நோய்

        தலைவனைப் பிரிந்ததும் தலைவியிடம் தோன்றும் மெய்யின் நிறைவேறுபாடாகிய பசலை உள்ளத்தின் துன்பம் உடலளவில் நிலைமாற்றப் பெறுவதற்கான சான்றாகும். ‘உள்ளம் நோயுற்ற காலத்தில் மேனியில் ஏற்படும் மாறுபாடுகளில் தலையாயதாகத் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது நிற மாற்றத்தையே’ எனக் கூறுவது சரியான மதிப்பீடாகும்.

          ”உள்ளுதோறு உள்ளுதோறு உருகிப்

           பைஇப் பையப் பசந்தனை பசப்பே”

என்ற பாடலில் தோழிக் கூற்றில் உள்ளத்தின் நினைவால் உடலில் பரவும் பசலை கூறப்படுகிறது.

          ”பழங்கண் கொண்டு நனிபசந் தனள்”

என்னும் தொடரில் பசலையின் காரணமாகிய துன்பமும் துன்பத்தின் விளைவாகிய பசலையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. கண்களிலும் நெற்றியிலும் பசலை படர்தலைப் பற்றி குறிப்புகள் பல உள்ளன. குறுந்தொகை பாடல் ஒன்றில்,

          ” மாசுஅறக் கழிஇய யானை போலப்

             பெரும்பெயல் உழந்த இரும்பிணர்ந் துறுதல்

             பைதல் ஒருகலை சேக்கும் நாடன்

             பசலை ஆர்ந்தநம் குவளை அம் கண்ணே”

இப்பாடலில் கண்களிலும் நெற்றியிலும் பசலை படர்வதும் மேனி முழுவதும் பசலை படர்வதும் சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடத்தக்கனவாகும். கண்களிலும் நெற்றியிலும் தோன்றும் பசலையைப் போலவே மேனி முழுவதும் தோன்றும் பசலை பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

          தலைவி தலைவனோடு சேர்ந்திருக்கும்போது விலகி நிற்கும் பசலை தலைவனை விட்டு நீங்கியிருக்கும் போது உடனே வந்து பற்றுகிறது. தலைவன் தலைவியைத்,

          ”தொடுவழி தொடுவழி நீங்கி

            விடுவழி விடுவழி பரத்தலானே”

என்னும் பரணர் பாடலில் பாசியைப் பசலைக்கு உவமை கூறுகிறாள். இதனை உளவியலார் உள்ளத்தின் துயரத்தால் உடலில் உருவாகி உள்ளத்தின் துயரம் தொலையும்போது இல்லாமல் போகும் பசலை நிலைமாற்றம் என்னும் உளவியல் கருத்துக்கு உரிய சான்றாகிறது.

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...