Skip to main content

பழந்தமிழர்களின் ஆடை அணிகலன்கள்

 

பழந்தமிழர்களின் ஆடை அணிகலன்கள்

ஆடைகள்

        பழந்தமிழர்களின் ஆடைகள் அனைத்தும், அனைத்துத் தரப்பனரையும் கவரும் வண்ணம் நெய்யப்பட்டன. ஆடைகள் மிக நாகரிகமாகவும், அவைகள் கோசிகம், பாடகம், பீதகம், அரத்தம், பச்சலை சுண்ணம், வடகம், சித்திரக்கம்பி, கவற்றும்படி, தேவாங்கு, குஞ்சரி, தேவகிரி, கத்தூலம் கரியல், பேடகம், புங்கர்க்காழகம், தூரியம், சில்லி கை, இறஞ்சி, வெண்பொத்தி, செம் பொத்தி, எனப் பலவகைகள் இருந்தன.

          பருத்தி ஆடைகளுக்கு நூல், தொடர் இழை, துவண், அறவை, பன்னாடை, நெய்யுரி, மரவுரி, துகில், ஆசிடை, இடைதல், கலிங்கம், உடுக்கை,ஏடகம், கத்தியம், காழகம், சீரை, படாம், பட்டம் சூடி எனப் பல பெயர்களிருந்தன.

அணிகலன்கள்

·        பெண்கள் தலைக்குச் சீதேவி, வலம்புரிச் சங்கு, தென்பல்லி, வடபல்லி, பொன்னமாலை, புல்லகம் முஞ்சகம் போன்றவற்றைச் சூடிக் கொண்டனர்.

·        செவிக்கு மகரக் குழை, தாளுருவி, நிலக்குதம்பி தோடு, வல்லிகைப் போன்றவற்றை அணிந்திருந்தனர்.

·        கழுத்துக்கு நேர் சங்கிலி, நிறை சங்கிலி, வங்கி, மகரப் பீலி, நுழைவினை, முத்துக்களால் ஆன பொன்னாரம் முதலியவற்றை அணிந்திருந்தனர்.

·        கைக்குப் பொன்வளை, முத்துவளை, சங்குவளை, இரத்தினவளை, மரகத மணிவளை, எனப் பல்வேறு வகையான வளையல்களை அணிந்து மகிழ்ந்தனர்.

·        கைவிரல்களில் முத்து மோதிரம், நாகவாய் மோதிரம், வாளைப் பகுவாய், பொன்னாலான வைர மோதிரம், இரத்தினக் கணையாழி போன்றவற்றை அணிந்தனர்.

·        கால் அணிகளாக சிலம்பு, பாதக்கலம், தண்டையணி, கிண்கிணி, குறங்குச்செறி, மணித்துவளை, போன்றவை.

இவ்வாறு அக்கால ஆடவரும், மகளிரும் தம்மை ஒப்பனை செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர் இலக்கியங்கள் வழி  உணரலாம்.

 

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...