Skip to main content

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...

  சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...           சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது.           மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு           புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...

தலவரலாறுகளால் பெயர் அமைதல்

 

தலவரலாறுகளால் பெயர் அமைதல்

          தலங்களுக்கே உரிய சிறப்பு வரலாறு அடிப்படையில் தலங்கள் பெயர் பெறுதல் உண்டு. இத்தகைய வரலாறுகள் மரபு வழியாகப் பேணப் பெற்று வருகின்றன. இவ்வரலாறுகளைத் தழுவியே தலபுராணங்கள் எழுந்துள்ளன. தலபுராணங்களில் சில செய்திகள் சில தலங்களுக்கே உரியதாகக் கொண்டுள்ளன. உதாரணமாக முருகன் சிவபெருமானுக்குப் பிரணவப் பொருள் உரைத்த வரலாற்றைச் சுவாமிமலைக்கே உரியதாகக் கொண்டுள்ளனர். ஆனால் இந்நிகழ்ச்சியைத் தணிகை வரையில் நிகழ்த்தியதாகக் கச்சியப்ப முனிவர் பாடியுள்ளார். எனினும் மரபு வழியாகச் சில வரலாறுகளுக்குரிய தலங்கள் இவையிவை என்று சமயவுலகம் போற்றிவருகிறது. அதனடிப்படையில் பெயரினையும் வழங்கிவருகிறது.

திருமயிலை

          மயில் வடிவில் இறைவி இறைவனைப் பூசை செய்தும் தனது உருவினைப் பெற்ற தலம் திருமயிலை என்பர். ஆகவே இத்தலம் மயிலை என்ற பெயரினைப் பெற்றதாகத் தலப்புராணம் விவரிக்கின்றது.

திருச்சிராப்பள்ளி

          சிராப்பள்ளி என்ற அரக்கன் வழிபட்டு உய்ந்தமையினால் திருச்சிராப்பள்ளி எனும் பெயரினை திருச்சிராப்பள்ளி பெற்றதாக அத்தலப்புராணம் பேசுகிறது.

          இடைக்காலத்தே சமணர்கள் தங்கிய படுக்கைகள் தவப்பள்ளிகள் பின்னர் சிவத்தலங்களாகச் சில இடங்களில் மாறியுள்ளன. இவ்விடங்களைப் பள்ளி என்றும் பாழி என்றும் பெயரிட்டு வழங்கும் மரபு உள்ளது. திருச்சிராப்பள்ளி, திருநனிபள்ளி என்ற இடங்களைக் காட்டாகக் கூறலாம். அவ்வகையில் சமணர்கள் தங்கியிருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. சிரா எனும் சமணர் இங்கிருந்ததாகவும் குறிப்புள்ளது. சிரா என்ற சமணரையே அரக்கனாக்கி அவன் வழிபட்டுய்ந்ததாக்க் காலப்போக்கில் செய்தியைப் பரப்பியிருக்க வழியுள்ளது.

திருத்தணிகை

          போர் முடிந்து வேகம் தனிந்து முருகன் வந்து வீற்ற இடம் தணிகை என்றாயிற்று. செருந்தணி எனவும் தலபுராணம் குறிப்பிடுகின்றது. இது செருவிற்குச் சென்ற வேகம் தணிந்தமையைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வரலாறு இத்தலத்திற்குரியதாகப் போற்றப்பெற்று வருவது மரபாகும்.

திருஆடானை

          ஒரு முனிவரின் சாபத்தால் ஆட்டுத்தலையும் ஆனையுடலும் பெற்ற ஒரு வேதகுமாரர் இங்கு வழிபட்டு மீண்டும் தேவவுடல் பெற்றதால் ஆடானை எனும் பெயரை இத்தலம் பெற்றது.

          மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தலபுராண வரலாறுகளினால் தலம் பெயர் பெற்றமைக்குச் சான்றாகின்றன.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...