Skip to main content

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

அலைகள்

 

அலைகள்

          கடலில் அலைகள் (waves) எழுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது காற்று. காற்றிலிருந்து சக்தி  நீருக்கு மாற்றப்படுவதால் கடல் அலைகள் தோன்றுகின்றன என்பர். கடல் அலைகளைத் ‘திரை’ என்னும் பெயரால் சங்கப் புலவர்கள் வழங்கி உள்ளனர்.

        அலை தோன்றுவதற்கான காரணத்தைச் சங்கப் புலவர்கள் வெளிப்படையாக எடுத்துரைக்கவில்லை. என்றாலும், காற்றுக்கும் அலைக்கும் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி,

          ”மாகா லெடுத்த முந்நீர்” (மது.361)

எனவரும் தொடர் அலையின் தோற்றத்திற்கான காரணத்தைக் குறிப்பிடுகின்றது எனக் கொள்ளலாம்.

அலை வகைகள்

          சங்கப் புலவர்கள் அவர்கள் காட்டும் படப்பிடிப்புகளை இன்றைய ஆழ்கடல் சிந்தனையாளர்களின் கடல் மட்ட அலை அளவொடு (Sea Disturbance Scale) ஒப்பிட்டுக் காணலாம். ஆனால் ஒரு வேறுபாடு பண்டைத் தமிழர் அலை வகைகளாகக் கண்டதை உரைத்தனரே தவிர, கணக்கிட்டு உரைக்கவில்லை. அவர்கள் குறிப்பிடும் அலைநிலை வகைகளாக,

1.  ”தயங்குதிரைப் பெருங்கடல்”   (நற்.18:7)

             ”திரை தபு கடல்”   (அகம்.263:7)

             ”தெண்கடல் திரை”   (மது.450)

2.  ”ஓங்குதிரை வியன்பரப்பு

 ஓங்குநிலை ஒட்டகம் துயில்மடிந் தன்ன” (மது.1)

”வீங்குதிரை”   (சிறுபா.154-155)

3.  ”உரைதிரை” (நற்.159:10)

”ஒல்லெனத்

திரை பிறழிய இரும்பௌவம்” (பொருந.177-178)

4.  ”வெண்திரைப் பரப்பு”  (பெரும்.457)

5.  ”பொங்குதிரை”       (நற். 35:1)

6.  ”நுரைப்பிதிர்ப் படுதிரை”   (அகம். 270:5)

”வயங்குபிசிர் மல்திரை”     (அகம்: 250:1-2)

அலைகளின் செயல்கள்

        கடற்கரையில் தோன்றும் மணற்குவியலை (Sand spit) எக்கர், சேர்ப்பு எனச் சங்கப்புலவர் வழங்குவர். இம்மணற் குவியல்கள் உருவாவதற்கு அடிப்படையான காரணங்களுள் ஒன்று கடலலை என்பர். இச் சிந்தனை பண்டைத் தமிழர்களிடமும் தெளிவாகக் காணப்படுகிறது. இதற்கு,

          ”எறிதிரை தொகுத்த எக்கர்”  (நற்.211:6)

          ”கரைபொரு திரங்கும் கனையிரு முந்நீர்த்

           திரையிடு மணல்”                             (மது.234-235)

எனவரும் சங்க இலக்கியத் தொடர்களே அரிய சான்றுகளாகும்.

   நில அரிப்புக்கும் (Erosion) கடலலைகள் காரணமாக அமைகின்றன என்பதையும் சங்கப் புலவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...