மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்!
22.02.2026 ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை ஈரோடு அருகில் அந்தியூரில் என் தோழி
தேவியின் (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
இலக்கியத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்) மகளுக்கு ஆரா
மஹாலில் திருமணம் நடைபெற்றது. நானும் என் தோழி நா. பிரியா (திருச்சி, தந்தைப் பெரியார்
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி
வருகிறார்) அவர்களும், அவர்களின் கணவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத்
திருச்சியிலிருந்து கிளம்பினோம். காலை 8 மணிக்குத் திருமணம் நடைபெறும் அந்தியூருக்குச்
சென்றோம். திருமணம் முடிந்தவுடன் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மேட்டூர் அணைக்குச்
சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பல
ஊர்களை விழுங்கிய அணை
சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின்
எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது
கட்டப்பட்டுள்ள அணைதான் மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம். காவிரிபுரம் என்ற
ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக்கும் ஊர்களிலேயே பெரிய ஊராகும். இது தவிர
கோவிந்தபாடி, நாயம்பாடி, நவப்பட்டி,
சாம்பள்ளி, சோளப்பாடி போன்ற அறுபதுக்கும்
அதிகமான சிற்றூர்களும் இந்த அணைக்குள் மூழ்கியுள்ளன.
திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பகுதிகளில்
இருந்த நிலங்கள், வளங்கள், அங்கே வசிக்கும்
மக்களின் வாழ்க்கை முறை, பயன்படுத்தப்படும் மொழிகள்
பற்றியதொரு ஆய்வுக்காக 1801இல் இப்பகுதிக்கு நடைப்பயணமாக வந்து
டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் (Dr.Buchanan Francis Hamilton) என்பவர், காவிரிபுரத்தில் 6500 பேர் வாழ்ந்ததாகத் தனது பயண விவரங்களைக் கொண்ட (A Journey from
Madras through the countries of Mysore, Canara and Malabar) என்ற
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மைசூர் நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையில் முக்கியமான வணிக நகராக காவிரிபுரம் இருந்ததாகவும், காவிரி ஆற்றின் வலது கரையில் சோழப்பாடி என்ற ஒரு ஊர் இருந்ததாகவும், இந்த ஊரில், ஆங்கில அரசின் கோட்டையும், ராணுவமும், அந்தப் பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்யும் வணிகச் சந்தையும் புகழ்பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேட்டூர் அணை
காவிரி
ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M
எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி
மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான்
உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.
·
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள்
பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட
பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும்
தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
·
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க
மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட்
மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
·
மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்கு
பிறகு முதன்முதலாக அணையின் நீர்பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால் 28-05-2017 அன்று துவக்கப்பட்டு விவசாயிகள்
பயனடைந்து வருகின்றனர்.
·
ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா, குழந்தைகள் விளையாட்டு மைதானம், ஒரு மினி மிருகக்காட்சிசாலை மற்றும் நினைவுப் பொருட்கள் மற்றும்
சிற்றுண்டிகளை விற்கும் பல சிறிய கடைகள் உட்பட பல பொழுதுபோக்குகளை வழங்குகிறது.
விருந்தினர்கள் மேட்டூர் அணைக்கு
அருகிலுள்ள சேலம், ஹோக்னகல்
நீர்வீழ்ச்சி, கோலி மலைகள் மற்றும் நாமக்கல் போன்ற
அருகிலுள்ள இடங்களை ஆராயலாம்.
நிறைவாக,
பூங்கா, மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் போன்றவற்றை பார்த்துவிட்டு, அங்கு சிறு கடைகளில் மீன் மற்றும் உணவு சாப்பிட அழைத்தார்கள். மதிய உணவை மீனுடன் சேர்த்து உணவைச் சாப்பிட்டோம். மீன் குழம்பு, மீன் ஃபிரை, ரசம், சாதம் இவை 120 ரூபாய் தான். சூடாகவும், திருப்தியாகவும் சாப்பிட்டோம். பிறகு நாங்கள் கிளம்பி திருச்சிக்கு வந்து சேர்ந்தோம். இன்றைய நாள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.







Comments
Post a Comment