Skip to main content

கடல்வாழ் உயிரினங்கள்

 

கடல்வாழ் உயிரினங்கள்

        கடலில் இடத்திற்குத் தக, ஆழத்திற்குத் தக, பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. இன்றும் அவற்றை முழுமையாக அறிவியல் துணைகொண்டும் அறிய முடியவில்லை. அறிவியல் பெரிதும் வளராத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நாட்டில் புலவர்கள் தாம் அறிந்தனவற்றுள் சில உண்மைகளை மட்டுமே இலக்கியங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் செய்திகளில், கடலில் வாழ் சுறவும் இறாலும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இவற்றோடு பனைமீன், ஆமை, இப்பி, சங்கு முதலியன பற்றிய சில குறிப்புகளும் காணப்படுகின்றன.

சுறா

          சங்க இலக்கியங்களில், சுறா இனத்து மீன்கள் பலவற்றுள்ளும் வாள் சுறா குறிப்படத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இஃது, தலைப்பகுதியில் நீண்ட கொம்பினைக் கொண்டிருக்கும். அதில் இருபுறமும் கூரிய முட்கள் இருக்கும். இதனை ‘Pristophorus shark’ என்பர். சங்க இலக்கியங்கள் இதனை எரிசுறா, கோட்சுறா, வயச்சுறா, வாள்வாய்ச் சுறா எனப் பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் பெருமீன் என வழங்கப்படுவதும் இச்சுறா மீன்களே என்பர் டாக்டர்.தி.முத்து கண்ணப்பா அவர்கள்.

          வெப்பக் கடற்பகுதிகளில் வாழும் இந்த மீன் பற்றிச் சங்க இலக்கியம் கூறும் சில செய்திகள் வருமாறு: இம்மீன் கடலில் மேற்பரப்பல் காணப்படுவது (குறுந்.318:1) சில வேளைகளில் தானே கடற்கரையில் ஒதுங்கிவிடுவதும் உண்டு. (அகம்.10:11) இது வலிமை மிக்கது. (நற்.111:7) எதிரிகளைத் தன் கொம்பினால் தாக்கி வீழ்த்த வல்லது (குறுந்.269:3-4),  மீன் பிடி வலைகளைத் தன் கொம்பினால் அறுத்துவிடும் (நற்.303:8-12), இச்சுறாவில் ஆண் இனத்தை ஏறு எனத் தொல்காப்பியம் (1540) குறிப்பிடுகின்றது.

இறால்

          சங்க இலக்கியங்கள் மிகுதியாகச் சுட்டப்படும் மீனினம் இறால். கடலில் ஆழம் அற்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வாழும் இவ்வகை மீன்களைப் பற்றிச் சங்க இலக்கியம் கூறும் செய்திகள் வருமாறு: இவை இருப்பைப் பூவைப் போன்ற தலையை உடையவை (நற்.111:1-2) , முற்றாத பசுமஞ்சள் கிழங்கின் புறத்தைப் போன்ற உட்புறத்தை உடையவை (நற்.101:1-2), முட்கள் போன்ற காலினை உடையவை (குறுநட.109:1), பூட்டிய அம்பு விடுபடத் தெரிக்கும் நாண்போலத் துள்ளும் இயல்பினை  உடையவை (அகம்.96:1-2), இவை அலைப்பரப்பிலே கூட்டம் கூட்டமாகக் காணப்படுபவை (அகம்.270:5).

பனைமீன்

          வாய்வாழியாகக் கடல் நீரைப் பனை உயரத்திற்குப் பீறிட்டு அடிக்கும் ஒருவகை மீன். இம்மீன் மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்படுகிறது.

          ‘பனைமீன் வழங்கும் வளைமேல் பரப்பு’ (மது.375) என்னும் அடியால், இம்மீன் கடலின் மேற்பரப்பில் வாழ்வது என அறிய முடிகின்றது.

ஆமை

          கடற்கரை மணலைத் தோண்டிப் பெண் ஆமை முட்டை இடுவதும், அம் முட்டைகள் பொரித்து குஞ்சுகளாகும் வரை ஆண் ஆமை அவற்றைக் காவல் காக்கும் என்ற செய்தியும் நப்பசலையார் பாடல்வழி (அகம்.160:3-8) அறிய முடிகிறது.

      பண்டைத் தமிழ் மக்கள் அறிந்திருந்த கடல் வாழ் உயிரினம் பற்றிய செய்திகளுள் பொருண்மை கருதி ஒரு சிலவே புலவர் பெருமக்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவாக,

    இன்றுபோல் அறிவியலில் பெருவளர்ச்சி பெறாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தத் தமிழ் மக்கள் இன்று வளர்ந்து வரும் ஆழ்கடல் ஆய்வுகள் தரும் முடிவுகளோடு ஒத்து அமையும் என்பது தெளிவு பெறுகிறது. இவ்வகையில் அனுபவத்தால் பெற்ற அறிவினைப் பண்டைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...