Skip to main content

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

ஓவியங்கள்

 

ஓவியங்கள்

        ஓவியக்கலை ஒரு சிறந்த கலை. அதன் மூலம் மக்களுக்குப் பல உண்மைகளை உணர்ந்த முடியும். ஓவியங்களின் வாயிலாக மக்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க முடியும். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கல்வி பயிற்சியும் கொடுக்க முடியும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆகையால் அவர்கள் ஓவியக் கலையை வளர்த்து வந்தனர்.

      இன்றும் பல கோயில்களிலே மண்டங்களிலே பல ஓவியங்கள் தீட்டியிருப்பதைக் காண்கின்றோம். அவ்வோவியங்கள் பெரும்பாலும் புராண வரலாறுகளைக் குறிப்பனவாகவே யிருக்கின்றன. பண்டைக் காலத்திலும், மக்கள் கூடும் கோயில் மண்டபங்களிலே ஓவியங்கள் தீட்டி வைக்கும் வழக்கம் இருந்தது. அக்காலத்து ஓவியங்களிலே தெய்வங்களைப்பற்றிய வரலாறுகளை நினைவூட்டும் ஓவியங்களும் இருந்தன. மக்களுக்கு அறிவூட்டும் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓவியங்களும் இருந்தன. நல்லொழுக்கத்தைப் போதிக்கும் கதைகளை விளக்கும் ஓவியங்களும் எழுதப்பட்டிருந்தன. இவ்வுண்மையைப் பரிபாடலிலே பார்க்கலாம்.

          சூரியனுடன் சேர்ந்து வருகின்ற சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை சக்கரவாள கிரியைச் சுற்றிவருவதைப் போல் எழுதப்பட்டுள்ள கிரகங்களின் காட்சியைக் காண்பர். அக்காட்சியிலே ஈடுபட்டு நிற்பார்கள் சிலர்.

          இரதியையும் மன்மதனையும் இணை பிரியாத நிலையே அமைத்து எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர். கணவனுடன் சேர்ந்து செல்லும் பெண்கள் அதைக் கண்டவுடன் இவள்தான் இரதியா? இவன்தான் மன்மதனா? என்று கேட்பர். கணவன்மார்கள் ஆம் என்று அக்கேள்விக்கு விடையளிப்பர்.

          அகலியையின் வரலாற்றை விளக்கி எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர். இவன் இந்திரனாகிய பூனை, இவள் அகலிகை, அகலிகையைக் கற்பழித்த இந்திரன், வெளியில் வரும் சமயத்தில் சென்ற கவுதமன். சினங்கொண்டதனால் அகலிகை கல்லுருப் பெற்ற விதம் இது, என்று அந்த ஓவியத்தைப் பார்த்து உரையாடுகின்றனர்.

       இத்தகைய பல வகையான ஓவியங்கள் நிறைந்த மண்டபத்தை யடைந்தவர்கள் அவைகளைக் குறித்துக் கேள்விகள் கேட்டனர். அக்கேள்விகளுக்கு விடையும் அளித்தனர்.

          ”என்றூழ் உறவரும் இருசுடர் நேமி

         ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்

         இரதி காமன் இவள் இவன் எனாஅ

         விரகியர் வினவ வினா இறுப்போரும்;

         இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன்

         சென்ற கவுதமன், சினன் உறக் கல்லுரு

         ஒன்றியபடி இதுஎன்று உரைசெய்வோரும்

         இன்ன பல பல எழுத்துநிலை மண்டபம்

         துன்னுநர் சுட்டவும், சுட்டறி வுறுத்தவும்” (பா.19 வரி 46-54)

இது செவ்வேளைப் பாடும் பாடல், பரங்குன்றத்தில் உள்ள சித்திர மண்டபத்தின் சிறப்பைக் கூறியிருக்கின்றது. சங்க காலத்திலே ஓவியக்கலை உயர்ந்த நிலையிலிருந்தது. அது மக்களுக்கு நல்லொழுக்கம், உலக ஞானம், தெய்வபக்தி இவைகளைப் போதிக்கப் பயன்பட்டு வந்தது என்று அறிகிறோம்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...