Skip to main content

கலித்தொகையில் காளையின் வகைகள்

 

கலித்தொகையில் காளையின் வகைகள்

       காளைகளின் இலக்கணத்தைக் கலித்தொகையிலே காணலாம். காளைகளிலே ஐந்து வகையுண்டு. அவை காரி, வெள்ளை, குரால், புகர், சேய் என்பன. காரி-கறுப்புக்காளை, வெள்ளை- வெள்ளைக்காளை, குரால்-மயிலைக்காளை, புகர்-புள்ளிக்காளை, சேய்-சிவப்புக்காளை. அவைகளின் தோற்றங்கருதி ஐவகையாகப் பிரித்தனர்.

          ”வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத்

          தெள்ளிதின் விளங்கும், சுரிநெற்றிக் காரியும்”

          திருமால் தன் வாயில் வைத்து ஊதுகின்ற வலம்புரிச் சங்கினைப் போல், தெளிவாக விளங்கும் வெண்மையான நெற்றியையுடைய கறுப்புக் காளையும்,

          ”ஒரு குழையவன் மார்பில் ஒண்தார்போல், ஒளிமிகப்

          பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்”

          பலராமனுடைய மார்பிலே நீண்டு தொங்குகின்ற சிவந்த மலர் மாலையைப் போல, ஒளியுடன் அழகாக அமைந்திருக்கின்ற சிவந்த கோட்டையுடைய வெள்ளைக்காளையும்,

          ”பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற்றணி போல

           இரும்பிணர் எருத்தின் ஏந்திமில்குராலும்,

          சிவபெருமானுடைய அழகிய கழுத்திலே காணப்படும் கருமையணியைப் போல, கழுத்திலே கருமையும் உயர்ந்த திமிலையும் உடைய மயிலைக் காளையும்,

          ”அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரங் கண்ஏய்க்கும்

           கணங்கொள் பல் பொறிக் கடுஞ்சினப் புகரும்”

          பகைவர்களை வருத்துந் தன்மையையுடைய வச்சிராயுதத்தைக் கொண்ட இந்திரன், உடம்பிலே ஆயிரங் கண்கள் அமைந்திருப்பதைப் போல, கூட்டமான பல புள்ளிகளையுடைய சினமுள்ள புள்ளிக் காளையும்,

          ”வேல்வலானுடைத் தாழ்ந்த விளங்கு வெண்துகிலேய்ப்ப,

           வாலிது கிளர்ந்த, வெண்காற் சேயும்,

        வேற் படையோனான செவ்வேளினிடம் தாழ்ந்து கிடக்கின்ற வெண்மையான உடையைப் போல, தூய்மையாகக் காணப்படும் வெண்மையான கால்களையுடைய சிவப்புக் காளையும்,

    காளைகளின் இலக்கணம் இவை. மூன்று பாடல்களில் காளைகளின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேலே எடுத்துக்காட்டிய பாடற் பகுதிகள் 105- பாடலில் காளைகளுக்குக் காட்டப்பட்டிருக்கும் உவமைகள் என்பது குறிப்பிடத்தக்கவை.

         

         

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...