Skip to main content

சிற்பக்கலை உருவ வகைகள்

 

சிற்பக்கலை உருவ வகைகள்

          சிற்பக்கலை உருவங்களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

·        தெய்வத் திருவுருவங்கள்

·        இயற்கை உருவங்கள்

·        கற்பனை உருவங்கள்

·        பிரதிமை உருவங்கள்

தெய்வத் திருவுருங்கள்

          தெய்வ உருவங்கள் சைவ சமய உருவங்கள், வைணவ சமய உருவங்கள் என இருவகைப்படும்.

          கங்காதரர், பைரவர், சந்திரசேகரர், நடராசர், பார்வதி, கணபதி, முருகன், பிச்சாடனார், அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர் மூர்த்திகள் சைவ சார்புடையன.

      இலக்குமி, திருமால், கண்ணன், இராமர், பலராமன், மாதவன், அனந்தசயனன், திரிவிக்கிரமன், நரசிம்ம மூர்த்திகள் வைணவச் சார்புடையன.

இயற்கை உருவங்கள்

          மனித உருவங்களில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர், குழந்தைகள், முதியவர் உருவங்களும் ஆடு, மாடு, மான், புலி, சிங்கம், குரங்கு முதலியன மிருகங்களும் வாத்து, கோழி, மயில், கருடன், புறா முதலான பறவைகளும் மரம், செடி, கொடி முதலானவைகளும் இயற்கை உருவங்கள் ஆகும்.

கற்பனை உருவங்கள்

       இயற்கையில் காணக் கிடைக்காத கற்பனையாகக் கற்பிக்கப்பட்ட உருவங்கள் இவை. கற்பனையில் உருவான பலவகைப் பூக்கள், இருதலைப் பறவைகள், சரபப்பட்சிகள், கின்னரர்கள், குக்குடச் சர்ப்பம் என்னும் கோழிப்பாம்பு, காமதேனு முதலானவை கற்பனை உருவங்கள்.

பிரதிமை உருவங்கள்

          வாழ்ந்து மறைந்தவர்களின் உண்மைச் சாயல் பொருந்திய உருவங்கள், அரசன், அரசியர் ஆகியோரின் உருவங்கள். மற்ற சிற்பங்களைவிட இச்சிற்பங்கள் அமைப்பது கடினமானது. மகாபலிபுரத்தில் நரசிம்மப் போத்தரையன், மகேந்திர போத்தரையன் என்னும் பல்லவ அரசர்களின் படிமங்கள் அரசியருடன் காணப்படுகின்றன.

        மதுரைக்கு அருகில் அனைமலையைச் சேர்ந்த நரசிங்க மங்கலத்தில் லாடமுனி கோயிலில் ஒரு பாண்டியனின் உருவம் அவன் மனைவியுடன் காணப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...