Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

ஒழுக்கம்

 

ஒழுக்கம் 

          ஒழுக்கம் என்பதற்குச் சாதி, மத, இன, கால, நேர, இட, வேறுபாடுகள் கிடையாது. அது கவசம் போல் இருந்து மனித குணங்களைப் பாதுகாக்கிறது. மனிதனுக்கு உயர்வுத் தாழ்வுகளைத் தருகிறது. அதனால் தான்,

          ”ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

           உயிரினும் ஓம்பப் படும்” (குறள்-131)

என்று திருவள்ளுவர் பெருந்தகை விளக்குகின்றார். அன்புடையவனாக, அருளுடையவனாக, குணசீலனாக, ஞானியாக இருந்தாலும் ஒழுக்கம் இல்லாதவனை மனிதனாக மதிக்கமாட்டார்கள். சாமியார்களைப் பற்றி அண்மைக் கால செய்தித் தாள்களில் வந்த செய்திகளை மூலமும், அதே போன்று இன்று நீதி மன்றங்களில் நடைபெறுகின்ற வழக்குகளில் பெரும்பான்மை ஒழுக்கக் கேடுகளினால் தோன்றிய வழக்குகள் அதிகமாக இருக்கின்றது.

·        முக்கோடி வாழ்நாளும், முயன்று பெற்ற தவமும் பெற்று சிறந்த பக்திமானாகப் பேரரசனாக ஆட்சி புரிந்த இராவணன் பிறன்மனையாளைக் கவர்ந்து ஒழுக்கம் தவறியமைக்காக இன்றளவும் உலகம் அவனைப் பழிக்கிறது.

·        தருமராசன் சூதாட்டம் என்ற தீய ஒழுக்கத்தைக் கைக் கொண்டதால் நாடிழந்து நல்ல மனையாளையும் இழந்தான். தீராத பழியையும் சூடிக் கொண்டான்.

·        கொடையில் சிறந்த கர்ணன் தனது இன்னுயிரையும் தானமாக ஈந்தவன். ஆனால் தீயவர்களான கௌரவர்கள் பக்கத்தில் சேர்ந்ததனால் தீயவனாக நினைக்கப்படுகின்ற இழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

·  தவ ஒழுக்கத்திலும், வேத வித்தைகளிலும் சிறந்தவனான, பரசுராமன் பாண்டவர்களின் குழந்தைகள் ஐவரையும் தூக்கத்தில் கொன்ற மகாபாவியாகின்றான்.

·        ஒழுக்கத்தின் மேன்மையால் நந்தன் நாயன்மார் வரிசையிலும், பாணன் ஆழ்வார் வரிசையிலும் வைத்துத் துதிக்கப்படுகின்றனர்.

·        நாகரிகம் இல்லாத சேரிகளிலே சேற்றோடும் செடிகளோடும் உறைந்து அழுக்கில் புரண்டு அருவருக்கத்தக்க நிலையில் வாழ்ந்த மக்களுடன் பழகி அவர்களைத் திருத்தி, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தித் தெய்வ நிலைக்கு உயர்ந்துள்ள அன்னைத் தெரசாவை மறக்க முடியுமா? அவருடைய தொண்டுகளை மறக்க முடியுமா?

 ஆக ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் ஒழுக்கமே சிறந்த காரணம் என்பதை அறிகிறோம்.

          ”தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை”

          ”ஈன்றாளோடு எண்ண கடவுளும் இல்”

          ”அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” (கொன்றை வேந்தன்)

என்றெல்லாம் பெருமையாகப் பேசப்படும் தாய்க்குப் பசிவந்தால்  கூட அப்பசியை நீக்கும் பொருட்டுச் சான்றோர் பழிக்கின்ற ஒழுக்கம் இல்லாத தீய செயல்களைச் செய்யக் கூடாது என்று வள்ளுவர் கட்டளையிடுகிறார். அவர்,

          ”ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

           சான்றோர் பழிக்கும் வினை” (குறள்-656)

என்று உறுதியாகச் சொல்கிறார்.

ஒழுக்கம் – இன்றைய நிலை

     நம் முன்னோர்கள் இயற்றிய இலக்கியங்கள் அனைத்தும் ஒழுக்கம், பிறன்மனை நோக்கா பேராண்மை, கற்பொழுக்கம் என்று அனைத்து நல் ஒழுக்கங்களையும்  உணர்த்துகின்றது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒழுக்கக்கேடு, பாலியல் துன்புறுத்தல், கள்ளக்காதல் என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.  சமுதாய மாற்றம் என்பது மக்களின் மனங்களை மாற்ற வேண்டும். இக்குற்றங்களுக்குத் தண்டனைக் கடுமையானதாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.  

நிறைவாக,

          தண்ணீரே சேற்றை உருவாக்குகிறது. அந்தச் சேற்றையும் தண்ணீரே கழுவி சுத்தமாக்குகிறது. ஆக தண்ணீரை இதமாகப் பயன்படுத்தினால் சேற்றிலே புரள வேண்டாம். அது போல் மனத்தை ஒழுக்க நிலையில் வைத்துக் கொண்டால் எப்போதும் உயர்ந்த நிலையில் தண்ணீருக்கு மேலேயே இருக்கும் தாமரைப் பூவைப் போலத் தலை நிமிர்ந்து வாழலாம்.

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...