Skip to main content

கொடுக்கல் வாங்கல்

 

கொடுக்கல் வாங்கல்

          கொடுக்கல் வாங்கல் என்பது உலக வழக்கு. கடன் கொடுப்பது கொடுக்கல். அதைத் திருப்பி வாங்குதல் வாங்கல். பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் முறை ஏற்பட்ட பிறகுதான் கொடுக்கல் வாங்கல் என்ற சொற்றொடர் பிறந்திருக்கக் கூடும்.

          பண்டைக் காலத்திலே பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பொருள் வேண்டியவர்கள். தமக்கு வேண்டிய பொருளை, உள்ளவர்களிடம் கடனாக வாங்கி க் கொள்வார்கள். பிறகு கொடுத்து விடுவார்கள். இப்படி வாங்கும் கடனுக்குத் தனிசு என்று பெயர்.

          கடன் வாங்கும் போது முகமலர்ச்சியுடன் வாங்குவார்கள். அக் கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது வாங்கும் போதிருந்த முகமலர்ச்சியை அவர்களிடும் காண முடியாது. இதை இன்றும் கடன் வாங்குவோரிடம் காணலாம். கடன் கொடுத்தவர்களுக்கும் கடன் வாங்கினவர்களுக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதையும் காண்கின்றோம். வாங்கும்போது மகிழ்ச்சியடைதலும், கொடுக்கும்போது வருத்தமடைதலும் மக்கள் இயற்கையென்றுதான் கொள்ளவேண்டும். மிகவும் நேர்மையாக நடந்துக்கொண்ட பண்டைக்கால மக்களிடமும் இக்குணம் இருந்ததாகத்தான் தெரிகின்றது.

          ”உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்

          கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்

          பண்டும்இவ் வுலகத்து இயற்கை; அஃது இன்றும்

          புதுவது அன்றே” (அகம்.பா.22)

உண்பதற்காக வாங்கும் கடனைப் பெற, முறையோடு கூறி இரக்கும்போது காணப்படும் முகமும், தாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது காணப்படும் முகமும் வேறு வேறாகக் காணப்படுதல் பண்டைக் காலத்திலும் இயல்பாகும். இந்த இயல்பு இன்றும் உண்டு. இது புதியதன்று. பழமை தொட்டுத் தொடர்ந்தே வருகின்றது.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...