Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

பொதியில், அம்பலம்

 

பொதியில், அம்பலம்

          மன்றம், பொதியில், அம்பலம் என்பவை ஊர் நடுவில் அமைந்த இடம் என்ற ஒரு கருத்தும், அம்பலமும் பொதியிலும் ஒரு மாளிகையில் அமைந்திருந்தவை என்ற மற்றொரு கருத்தும் நிலவுகின்றன. ஊர்களில் கூடின கூட்டத்திற்கு மன்றம், பொதியில், அம்பலம் அவை என்னும் பெயர்கள் வழங்கியிருந்தனவாகப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இருந்து அறிகிறோம். இவை யாவும் ஊர்க்கூட்டத்தில் பெயர்களென கருதலாம்.

          ”சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பழங் கடம்பும்

           மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும்”

(திருமுருகாற்றுப்படை-255-256)

எனவரும் திருமுருகாற்றுப்படையில் மட்டும் மன்றமும், அம்பலமும் வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளன. அதன் உரையாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார். மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடிய இடம் எனவும், அம்பலம், பொதியில் என்னும் இரண்டும் ஒரு சிறு மாளிகையைக் குறிப்பிட்டன என்றும், அதன் நடுவில் ஒரு பீடம் இருந்ததாகவும் அறிஞர் கருதுகின்றனர். இதையொட்டிப் பல அறிஞர்கள் பலவித கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

          எடுத்துக்காட்டாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் மன்றம் என்றது ஒரு மாளிகை என்றும், பொதியில் என்றது பொது, இல், இரு என்னும் சொற்களின் இணைப்பில் ஏற்பட்டதெனலாம். அதாவது பொதுவில் என்பதற்குப் பொதுவான இருப்பிடம் என்ற பொருள் இருந்தமையை எடுத்துக் காட்டுகின்றார்.

          அம்பலம், பொதியில், மன்றம் என்னும் சொற்களும் பொதுவாக இடத்தைக் குறிப்பினவே ஆகும். பொதியில் எவ்வாறு பொதுவான இடத்தைக் குறிக்கின்றதோ அதைப் போன்றே அம்பலமும் மன்றமும் பொதுவான இடத்தையே குறிக்கும் சொற்கள் எனலாம்.

          நடனக் கோலத்தில் நிற்கும் சிவபெருமானை வாழ்த்திப் பாடும் சேக்கிழார், ‘அம்பலத்தாடுவான்’ என்கிறார். பொதுவில் நடம் புரியும் அரசு என்பதும், மன்றுடையான், மன்றாடி, என்னும் சொற்களும் இறைவன் என்னும் பொதுவான இடத்தில் நடம் புரியும் நிலையைக் காட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும், அம்பலம் என்பது அரங்கு என்னும் சொல்லுக்கு எதிர்மறையான சொல் என்பதும் புலப்படும். ”அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆடவேண்டும்” என்னும் வழக்கில் உள்ள பழமொழியும் இதை உறுதி செய்கிறது.

          ஊர்களில் கூடிய இக்கூட்டத்தின் நிகழ்வுகளைக் காண்பதற்கு ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வருவது மரபானதால், இக்கூட்டங்கள் மாளிகைக்கு உள்ளோ அல்லது நான்கு சுவர்களுக்கு நடுவிலோ கூடியிருக்க வாய்ப்பில்லை. எனவே, இவை ஊருக்குப் பொதுவான இடத்தில் கூடின என்றும், வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தல் என்பது மக்கள் அனைவரும் காணும் வகையில் நடைபெற்றது என்றும் கொள்வதே பொருத்தம் ஆகும்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...