Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

சிபி சக்ரவர்த்தி

 

சிபி சக்ரவர்த்தி 

   வட இந்திய அரசனும் அந்தண சத்திரியனுமான சிபி, தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்ட சோழ அரசனாகக் குறிக்கப்படுகிறார். இவர் ஒருநாள் அரசவையில் அமர்ந்திருந்த போது, பெரிய பருந்து ஒன்றினால் துரத்தப்பட்ட சிறிய புறா ஒன்று இவர் காலடியில் வந்து விழுந்தது. பருந்து மிகவும் பசியோடு இருந்தபடியால் அப்புறாவைக் கொன்று தின்ன விரும்பியது. ஆனால் சிபிச் சக்கரவர்த்தி தன் காலடியில் தஞ்சம் அடைந்த புறாவைக் காக்க உறுதி பூண்டார். எனவே தன் கால் சதைகளை அரிந்து, துலாக்கோலில் நிறுத்தி, அப்புறாவின் எடைக்கு ஈடான சதைகளை பருந்திடம் அளித்தார். பிற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட, வீர சோழியர்கள் தாங்கள் சிபியின் வழியில் வந்தவர்கள் என்றே கூறிக் கொண்டனர். மேலும் பழைய தமிழ் நூல்களும் சிபியின் பெருமைகளைப் பலவாறு பேசுகின்றன.

          ”தன்னகம்புக்க குறுநடைப் புறவின்

         தபுதி அஞ்சிச் சீரை புக்க

         வரையா ஈகை உரவோன் மருக” –புறநானூறு

        ”புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்

         குறைவில் இடம்பரிந்த கொற்றவன்” - சிலப்பதிகாரம்

        ”உடல் கலக்கற வரிந்து தசையிட்டும் ஒருவன்

         ஒருதுலைப் புறவோடொக்க நிறைபுக்க புகழும்” –கலிங்கத்துப்பரணி

        ”காக்கும் சிறு புறவுக்காகக் களி கூர்ந்து

         நூக்கும் துலைபுக்க தூயோன்” – விக்கிரமசோழன் உலா

        ”துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச்

         சோணாடு” – பெரியபுராணம்

        இவ்வாறு தமிழ் மக்களால் புகழ்ந்து பேசப்பட்ட சிபி மன்னன் சூரிய குலத்தில் பிறந்து அயோத்தியை ஆண்ட அரசனாவான். இவர் தன் வயது முதிர்ந்த காலத்தில், உலக வாழ்வினை வெறுத்து, தவம் செய்வதற்காக அழுந்தூரை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார். பிற்காலத்தில் இவர் வழியினர் அனைவரும் சிபி என்ற பெயரிலேயே தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். இருந்தபோதிலும் சிபி என்னும் வடஇந்தியப் பெயர் தமிழ்நாட்டினரால் சிறிது சிறிதாக தமிழ்ப்படுத்தப்பட்டது. அதனால் சிபியின் மகன் சிப்பி என்று அழைக்கப்பட்டார். சிப்பியின் மகன் சிப்பியன் என்று அழைக்கப்பட்டார். சிப்பியன் தூய தமிழில் திருத்தங்கல் என்றே அழைக்கப்பட்டார். திருத்தங்கல் என்பது சிப்பியைக் குறித்த தூயத் தமிழ்ச் சொல்லாகும். கடல் சிப்பிக்குள் முத்து ஆகிய செல்வம் தங்குவதால் சிப்பி தூய தமிழில் திருத்தங்கல் என்றே அழைக்கப்பட்டது. திருத்தங்கல் என்னும் தமிழ்ச் சொல்லே வடமொழியில் ‘ஸ்ரீநிவாஸ்’ என்று அழைக்கப்பட்டது.

பார்வை நூல்

1.        தமிழர் வரலாற்றுக் கதைகள்  - ஆதிரை சுகுமாரன் ப- 215

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...