Skip to main content

கவியரசர் கண்ணதாசன் திரைப்படப் பாடல்களில் இறையிசைப் பாடல்கள்

  கவியரசர் கண்ணதாசன் திரைப்படப்   பாடல்களில் இறையிசைப் பாடல்கள் ஆய்வுச் சுருக்கம்             பக்தியையும் பக்தியின் பயன்களையும் இனிமையாகவும் எளிமையாகவும் எடுத்துத் தந்த பாங்கிளைக் கவியரசர் கண்ணதாசனின்   திரையிசைப் பாடல்களில் காணலாம் . ஆழ்வார்களும் நாயன்மார்களும் , வேதாந்திகளும் , சித்தாந்திகளும் , ஞானிகளும் , சான்றோர்களும் ஆற்றிய சமயப் பணியைக் கவியரசர் தன் தனிப் பாடல்கள் மூலமாகவும் , திரையிசைப் பாடல்கள் மூலமாகவும் செய்துள்ளார் என்றால் மிகையில்லை . இறையிசைப் பாடல்கள் வழி உலக மக்களை ஒரு குலமாகக் கருதி ஒருதாய் மக்களாகச் சமரச சகவாழ்வு வாழ்வதற்குத் தாய்மொழிப் பற்றும் , தாய்நாட்டுப் பற்றும் தடையில்லை என்ற அரிய செய்தியை அற்புதமாகப் பாடுகின்றார் . திரைப்படப் பாடல்கள் பக்தி பாடலாக உயரும் தகுதியை ஊட்டியவர் கவியரசர் என்றால் மிகையில்லை . குறிப்புச் சொற்கள் அணு , சமயம் , சமரசம் , சித்தாந்தம் , தத்துவம் , ஆணவம் , கலைகள் , இயக்கம் , வேதம் , சத்தியம் , அடியவன் , மதம் , சமுதாய புரட்சி முன்னுரை     ...

கணிகையர் கலைகள்

கணிகையர் கலைகள்

        பரத்தையர்கள் அறுபத்துநான்கு கலைகளும் கற்றவர்கள். அவர்கள் ஆண்மக்களை மயக்குவதற்காகவே அக்கலைகளைக் கற்றிருந்தார்கள். அவர்கள் கற்றிருந்த கலைகள் பற்றி மணிமேகலை தெளிவாக தெரிவிக்கின்றது. மாதவி அறிந்திருந்த கலைகள் இவை இவை என்பதை அவளுடைய நற்றாய் சித்தராபதி கூறுவதாக மணிமேகலை ஆசிரியர் சொல்லுகின்றார்.

            ”அரசர்க்கு ஆடும் கூத்து, எல்லோர்க்கும் பொதுவாக ஆடும் கூத்து என்றும் இருவகைக் கூத்துகளையும் ஆடக் கற்றவள். இசை தாளங்களுக்குரிய சீர், தாளம், யாழ் வாசிக்கும் முறை, நாடகங்களுக்குரிய பாடலகள் இவைகளையெல்லாம் அறிந்தவள். மத்தளம் வாசிப்பாள். புல்லாங் குழல் கற்றவள். நல்ல நீர் விளையாட்டை அறிந்தவள். பாயிலே பள்ளிக் கொள்ளும் முறையைக் கற்றவள். சமயத்துக்கேற்றபடி நடந்து கொள்ளும் இங்கிதம் தெரிந்தவள். உடம்பால் செய்யப்படும் அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்தவள். பிறர் கருத்தை அறிந்து கொள்ளும் அறிவு படைத்தவள். பிறர் மனத்தைக் கவரும்படி இனிமையான சொற்களைத் தொடுத்துக் கூறும் சொல்வன்மை வாய்ந்தவள். தன் உள்ளத்தைப் பிறர் காணாமல் மறைத்து ஒழுகும் திறமை படைத்தவள். எழுதுகோல் பிடித்து சித்திரம் தீட்டத் தெரிந்தவள். மலர்களால் பலவிதமான மாலைகளைத் தொடுப்பாள். காலத்திற்கேற்றவாறு ஆடவர் நெஞ்சைக் கவரும்படி அலங்கரித்துக் கொள்வாள். சோதிடம் அறிவாள். பரத்தையர் அறிய வேண்டிய எல்லாக் கலைகளையும் அறிவாள். நாடக மகளிர் கற்பதற்கென்றே நன்றாக எழுதப்பட்டது. ஓவியச் செந்நூல் என்பது அதில் கூறப்படும் நுண்பொருள்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தவள் மாதவி. அவள் பொன் வளையல்களை அணிந்து அழகாக விளங்குகின்றவள். இத்தகைய சிறந்த பரத்தையாகிய மாதவி நல்ல தவம் புரிந்தது என் குலத்துக்கே நாணம் தரும் செய்தியாகும்” இவைகளை,

         ”வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்துக்

         கூத்தும், பாட்டும், தூக்கும், துணிவும்

         பண்யாழக் கரணமும், பாடைப் பாடலும்,

         தண்ணுமைக் கருவியும், தாழ்தீம் குழலும்,

         கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்,

         சுந்தரச் சுண்ணமும், தூநீர் ஆடலும்,

         பாயல் பள்ளியும், பருவத்து ஒழுக்கமும்,

         காயக் கரணமும், கண்ணியது உணர்தலும்,

         கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும்,

         வட்டிகைச் செய்தியும், மலர் ஆய்ந்து தொடுத்தலும்,

         கோலம் கோடலும், கோவையின் கோப்பும்,

         காலக் கணிதமும் கலைகளின் துணிவும்,

         நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த,

        ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்,

        கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை

        நற்றவம் புரிந்தது நாண் உடைத்து. (காதை 2, வரி 18-33)

இவ்வடிகளின் வழி மணிமேகலை காப்பிய காலத்தில் பரத்தையர்களின் கலைத் திறத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

பார்வை நூல்

1.  மணிமேகலை காட்டும் வாழ்வு – சாமி. சிதம்பரனார், செண்பகா பதிப்பகம்,சென்னை. 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...