Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

தமிழர்களின் மாற்றுமுறை மருத்துவம்

 

தமிழர்களின் மாற்றுமுறை மருத்துவம்

       மாற்றுமுறை மருத்துவம் பலவிதமான மூலங்களைப் பெற்றுள்ளது. நாட்டுப்புற மரபு, மரபான பழக்கங்கள், தத்துவக் கோட்பாடுகள், உடற்பயிற்சி முறைகள், யோகாசனங்கள் என அவற்றைக் குறிப்பிடலாம். மாற்றுமுறை மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் சிலர் கற்றறிந்தவர்களாகவும், திறமையாளர்களாகவும் மற்றும் சிலர் அரைகுறையாளர்களாகவும் உள்ளனர். இவர்கள் முறையான இசைவு பெற்றவர்களாகவோ, பதிவு பெற்றவர்களாகவோ இல்லாமல் பாமர நோயாளிகளை அணுகி அவலக்கு ஆளாகின்றனர்.

          மாற்றுமுறை மருத்துவத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம். நம்பிக்கை அடிப்படையில் குணப்படுத்தல், மனோதத்துவவாதிகள், மந்திரவாதிகள், மற்றும் மனவியல் வல்லுநர்கள் ஆகியோர் இப்பிரிவில் அடங்குவர். உணவுமுறையின் மூலமாகச் சிகிச்சை அளிப்பவர்கள் மூலிகைகளைக் கொண்டும் ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்றவைகளைக் கடைப்பிடிப்பவர்கள் இன்னொரு பிரிவினர். மூன்றாவது பிரிவில் ஓமியோபதி போன்ற மருத்துவ முறைகளைக் கையாள்வோர், நான்காவது பகுதியில், சீனமக்களிடையே செல்வாக்குப் பெற்ற அக்குபஞ்சர் (அலகுமுறை மருத்துவம்) முறையையும், தேகத்தைப் பிடித்துவிட்டுத் தேய்த்தும் அளிக்கப்படும் நீவுகைச் சிகிச்சையும், காந்தசக்தி, மின்சாரம் ஆகியவற்றைக் கொண்டு அளிக்கப்படும் மின்னியற் சிகிச்சையும் அடங்கும். இந்தப் பிரிவுகளில் அடங்காத முறைகளும் பழக்கத்தில் உள்ளன.

          உலகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே நம்நாட்டிலும் மாற்று மருத்துவ முறை பரவலாகக் கைக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  மக்கள் இத்தகைய மாற்று முறைகளைப் பின்பற்றுகின்றன. நம் நாட்டில் சிற்றூர்ப் பகுதிகளில் இம்முறைகள் பரவியிருப்பதற்கு முறையான கல்வியும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்கள் அப்பகுதியில் கிடைக்காமையும் ஒரு காரணமாகும். நம்பிக்கை இழக்கச் செய்யும் புற்றுநோய் போன்ற நோய்கள், இம்மாதிரி முறைகளுக்கு வழிகோலுகின்றன. முறையான மருத்துவப் பராமரிப்புக்குத் தேவைப்படும் கவனிப்பும், பணசெலவும், நெடுநேரம் மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் மாற்று மருத்துவ முறைகளைத் தேடிச் செல்ல நோயாளிகளைத் தூண்டுகிறது.

       இம்முறை தீங்கற்றது. மலிவானது என்பதும் சுட்டத்தக்கது. சாகும் தறுவாயில் இருக்கும் நோயாளிக்கு நம்பிக்கையூட்டி தாம் தேறி வருகிறோம் என்ற உணர்ச்சியை இம்முறைகள் ஏற்படுத்துகின்றன.  இவ்வாறு அமையும் ஊக்கம் ஓரளவுக்கு வரவேற்கத்தக்கது.

          இம்முறைகளில் குறைபாடுகளோ தொல்லைகளோ இல்லாமல் இல்லை. இம்முறைகள் சில நேரங்களில் இடராகவும் அமைகிறது. உரிய நேரத்தில் முறையான சிகிச்சை பெறுவதை இம்முறை தாமதப்படுத்தவும் செய்கிறது. உலோக மருந்துகள், பஸ்பங்கள் போன்றவை உடலுக்குத் தீங்கிழைக்கின்றன. இம்மருத்துவம் சிகிச்சைமுறை குறித்து மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

பார்வை நூல்

1. தமிழும் பிறதுறைகளும் - பதிப்பாசிரியர் முனைவர் ந.கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். ப.103-104

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...