Skip to main content

எழுதுகோல் கனவுகள் (புத்தக மதிப்புரை)

  எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை )         புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் .  இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் .          கவிஞர் மலர் மன்னன்   அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .         இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...

மேற்கணக்கு கீழ்க்கணக்கு- விளக்கம்

 

மேற்கணக்கு கீழ்க்கணக்கு- விளக்கம்

சங்க காலத்தில் அறஇயலை இருவகையாக வகைப்படுத்திக் கூறியிருக்கின்றனர். அவைகளை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு எனக் கூறலாம்.

மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு, கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. மேற்கணக்கு தொகையும் பாட்டும், தொகை எட்டு பாட்டு பத்து, மேற்கணக்கு என்று அமைந்த காரணங்களைக் காணலாம்.

மேற்கணக்கு - விளக்கம்

மேற்கணக்கு நூல்கள் முன்னோர் வாழ்ந்து காட்டிய வரையறை கொள்கையை மையமாகக் கொண்ட விளக்கங்கள். இன்று நீதி மன்றத்தில் முன்னொரு காலத்தில் நடைபெற்ற வழக்கு, தீர்ப்பு ஆகியவை நிகழ்வுகளாகவே அமைக்கப் பெற்றிருப்பது போல இதுவும் வாழ்வியல் நிகழ்வுத் தொகுப்பு நூல்கள். அவை இரண்டு வகை, ஒருவன் தன்னளவில் வாழ்ந்த நிலை; மற்றவர்களின் நன்மைக்காக அவன் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டுகள். தன்னளவில் செய்த வாழ்வியல் அறங்கள் தொகையாயின. பரந்து பட்டுச் சென்று புகழ்விளைத்ததாதலின் பாட்டு ஆயின. எனவே சங்க காலத்தில் தன்னளவில் அறம் மேற்கொள்ளல் என்பதைவிட, சமூக நலன்கருதி அறம் மேற்கொள்ளுதல் அதிகம் என்பதனாலேயே தொகை எட்டாகவும் பாட்டு பத்தாகவும் நின்றன.

கீழ்க்கணக்கு - விளக்கம்

கீழ்க்கணக்கு என்பது முன்னோர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நிகழ்வுகளிலிருந்து அறக்கொள்கைகள் வடித்தெடுக்கப்படுகின்றன. கீழ்க்கணக்கு என்பது அறக்கொள்கை,

”தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று

அழுது காமுற்று அரற்று கின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே”

என்பது அப்பரடிகள் வாக்கு. கீழ்க்கணக்கு என்பது செயலாற்றும் ஒருவனின் மனநிலையை மனத்தில் நிற்கும் அறக் கொள்கையை அமைத்து அதற்கேற்பப் பயன் வழங்குதல். எனவே கீழ்க்கணக்கு என்பது அறஇயல் கொள்கை அல்லது ஒழுக்கவியற் கூறுகள் எனலாம். மேற்கணக்கிலிருந்து கீழ்க்கணக்கு அமைகிறது.

பார்வை நூல்கள்

1.   தமிழும் பிறதுறைகளும்  ப.198-199 – பதிப்பாசிரியர் முனைவர் ந.கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை -600 113.

 

 

 

Comments

Popular posts from this blog