Skip to main content

பரத்தையர்

 

பரத்தையர்

        பரத்தையர் சங்க இலக்கியங்களில் அதிக அளவுக்குச் சிறப்பிடம் பெற்றிருக்கின்றனர். ‘கணிகையர்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். தொல்காப்பியம், ஆடவர்களுக்குரிய  பிரிவு வகைகளில் ‘பரத்தையிற் பிரிவைக்’ குறிப்பிடுவதலிருந்தும், வள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ என்று தனி அதிகாரமே ஒதுக்கிப் பரத்தமை ஒழுக்கத்தைக் கண்டிப்பதிலிருந்தும், அவர்கள் சமூகத்தில் பெற்றிருந்த நிலைமையை உணரமுடிகின்றது. பரத்தைமைத் தொழிலால் வாழ்க்கை நடத்தியவர்கள் எந்தவொரு தனிப்புரவலனிடமும் தனியன்பு கொண்டவரல்லர். இவர்கள் இரவுக்கோர் வரவு பார்க்கும் பள்ளியறைப் பைங்கிளிகள்.

          இவர்களைச் ‘சேரிப்பரத்தையர்’ அல்லது ‘காமக்கணிகையர்’ என்றனர். இன்னெரு வகையினர், யாரேனும் ஒரு தனிப்புரவலரோடு மிகுந்த அன்புகொண்டு அவர்களோடு காதல் வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர்கள் யாரையும் மணம்செய்துகொண்டு வாழ முற்படவில்லை. இவர்களைக் ‘காதற்பரத்தையர்’ அல்லது ‘காமக்கிழத்தியர்’ என்பர். இவர்கள் மணமாகாத வாழ்க்கைத் துணைவியர்களாகவே கருதப்பெற்றனர்.

          அரசமாளிகையில் இக்கணிகையர்கள் பெரும்பாலோர் காணப்பட்டனர். அவர்கள் அரசருடைய மெய்க்காப்பாளராகவும் பணியாட்களாகவும் பணியாற்றினர். அவர்கள் அரசனோடு போர்க் களத்திற்கும் சென்றனர். இவர்கள் வனப்புடைய வனிதையர். இடையில் சிறியதொரு வாளினைத் தமது கச்சையில் செருகியிருந்தனர். அரசனுடைய அக வசதிகளை மேற்பார்த்தனர்.

 பரத்தையர்கள் நடனம், இசை, நாடகம் முதலியவற்றில் வல்லமையுடையவராயிருந்தனர். இசையும் நாட்டியமும் இன்று வரை இவர்கள் பயிலும் மரபாக இருந்துவருகின்றது. மேலும் இருவகைக் கூத்து (வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து), பந்தெறிந்து ஆடுதல், உணவு வகை பற்றிய கலையாக சமுத்திரம், காதற்கலையின் அனைத்துக் கூறுகள், திறமாகவும் நயமாகவும் பேசும் கலை, பிறர் காணாது திரியும் கலை, பிறர் எண்ணங்களை உய்த்துணரும் வன்மை, கையெழுத்துக் கலை, பூமாலை கட்டும் கலை, வேடமணிதல், உடை தயாரித்தல், முத்துக்கள் முதலிய அழகிய மணிகளைக் கோத்தல், சோதிடம் முதலிய கலைகளைக் கற்றுத் தேர்ந்தனர்.

       சோழமன்னர்கள் இவர்களை மிகவும் ஆதரித்து வந்தனர். ஒவ்வோராண்டிலும் மிகச்சிறந்த நாட்டியக்காரிகளைத் தெரிந்தெடுத்துப் பரிசும் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தனர். பரத்தையர்களில் மிகச் சாதாரணமானவர்கள் இழிந்த, மோசடியான இழிதொழிலை நடத்தினர். அவர்கள் தம் வீட்டுவாசலிலோ கடைத் தெரு ஓரங்களிலோ நின்று கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சாடை காண்பித்து, கைத் தட்டிக் கூப்பிட்டுப் பிழைத்து வந்தனர்.

          இவர்கள் நகரங்களில் ‘பரத்தையர் சேரிகள்’ என்னும் தனிப் பாக்கங்களில் வசித்து வந்தனர். மதுரையில் இரண்டு பெருந்தெருக்களில் இவர்களே வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. ஏனாதிப்பட்டம் பெற்றவன் ஒருவன் ஏனாதிச்சேரி என்று ஒரு குடியிருப்பை இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருத்தான். ஆட்சியாளர்களின் விருப்பக் கணிகையர் பலவித சிறப்புகளைப் பெற்றனர். தங்கத்தாலான வெற்றிலைப் பாக்குப் பெட்டிகளை வைத்துக்கொள்ளுதல் முதலியவை இவர்கள் பெற்ற சிறப்புக்களாகும். இக்குலத்தாரைத் தமது தொழிலை மறந்த அல்லது புறக்கணித்தக் கணிகையரைச் சட்டப்படித் தண்டித்தனர்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...