Skip to main content

கட்டுக் கேட்டல்

 

கட்டுக் கேட்டல்

 

          களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் காமநோயை அறியாத தாயர், அவளது வேறுபாட்டை அறிதற்பொருட்டு கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுக்குறி கேட்பர். ஆண்டு, அக்கட்டுவச்சி ஒரு முற்றத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணிப் பார்த்து, அதனாற்போந்த சில நிமித்தங்களை அறிந்துஇவள் முருகனால் அணங்கப்பட்டாள்எனக் கூறுவது வழக்கு. இவ்வழக்கினை, நற்றிணை உரையாசிரியர், ‘முறத்திலே பிடி நெல்லையிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்திற்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்து அந்நெல்லை நந்நான்கு எண்ணி எஞ்சியவை ஒன்றிரண்டு மூன்றளவும் முருகணங்கெனவும், நான்காயின் பிறிதொரு நோயெனவுங் கூறப்படும் எனபார். சிறு முறத்தில் வட்டமாகப் பரப்பிய நெல்லில் பார்க்கும் ஒருவகைக் குறி என்பார் பொ.வே.சோமசுந்தரனார். கட்டுக்குறி கேட்கும் முறையினை,

          நன்னுதல் பரந்த பசலை கண்டு

           செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

           கட்டிற் கேட்கும் .....”

என நற்றிணை குறிப்பிடும். பெருங்கதையில்.

          கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட

           வட்ட நெல்லும் .......”

எனக் குறிக்கப்பெறுவது கொண்டு இதனைத் தெளியலாம். மேலும், கட்டுக்கேட்டலுக்குரிய பொருளாக நெல்லுடன் பிரப்பரசியும் பயன்படுத்தப் பெறுவதை அகநானூற்றால் அறியலாம்.

          கட்டுக்குறி சொல்லும் கட்டவிச்சியை, ‘செம்முது பெண்டிர்என நற்றிணையும், ‘அகவன் மகளிர்எனக் குறுந்தொகையும், ”முதுவாய்ப் பெண்டிர்என அகநானூறும், ‘கட்டறி மகடூஉஎனப் பெருங்கதையும் குறிப்படும். குறி சொல்லும் அக்கட்டுவிச்சியர் கையில் ஒரு சிறு கோலும் கொண்டிருப்பர். சங்ககாலத்தில், குறிசொல்லும் அம்மகளிர் பிற்காலத்தில் குறத்தியர் என்ற பெயராலும் அழைக்கப்பட்டனர். இக்குறிபார்க்கும் முறையே பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக வளர்ச்சிப் பெற்றது என்பர்.

பார்வை நூல்

1. ஐம்பெருங்காப்பியங்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும் - முனைவர் இரா.இரகோத்தமன்,குகன் பதிப்பகம், திருவாரூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...