Skip to main content

விடுகதையில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள்

  விடுகதை யில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள்         வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகிய உணர்வுப் பண்புகள் இலக்கியங்களின் கருவாக அமைகின்றபோது அவை படைப்போனின் உணர்ச்சிக்குத் தக்க உருவம் பெற்றுச் சாவாப் பேற்றினைப் பெறுவதுண்டு . அத்தகைய சாவாமையும் மூவாமையும் பெற்ற கருவூலமே விடுகதைகளாகும் . மானுடத்தின் சிந்தனைத் திறனையும் , பண்பாட்டுப் படிநிலைகளையும் அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாகவும் , இலக்கியத்தின் கூறுகள் படிந்து விளங்குவதாகவும் உள்ளதால் விடுகதைகள் ‘ இலக்கியம் ’ எனும் பெருமை அடைகின்றன . அறியாமையால் உடனுக்குடன் மனிதனை வெட்கப்பட வைக்கும் இலக்கியம் விடுகதை ஒன்றேயாகும் . இலக்கியங்களில் விடுகதை         தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் விடுகதையைப் ‘ பிசி ’ என்று குறிப்பிடுவதைக் காணலாம் . தொல்காப்பியர் பிசிக்குரிய இலக்கணத்தைக் கூறும் போது ,             ” ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும்       ...

குந்தி

 

குந்தி

        கண்ணனது சொற்படி அருச்சுனன் ‘வஞ்சரீகம்’ எனும் அம்பினால் கன்னனைக் கொல்கிறான். கன்னன் குற்றுயிராய்த் துரியோதனன் போன்றோர் மிகுந்த வருத்தம் அடையும்படி வீழ்ந்துக் கிடக்கின்றான்.இச்செய்தியை அசரீரியாலறிந்த குந்தி கதறிக்கொண்டு போர்க்களத்தை நோக்கி ஓடி வருகின்றாள்.

          குந்தி தன் உள்ளம் துன்பத்தால் உருகவும், கண்ணிர் பெருகவும், குழல் கற்றை சரிந்து விழவும் வருகின்றாள். வந்தவள் கோவெனக் கதறித் தலையிலடித்து அழுகின்றாள். தான் கன்னனை ஈன்று அருளிள்ளாமல், பொற்பேழையில் விடுத்து, கங்கையாற்றில் விட்ட செய்தியை அவள் கூறிப் புலம்புகின்றாள். மேலும் அவன்றன் வீரத்தன்மை போன்றன கேட்டு மகிழ்ந்திருக்கும் நாளில் அவன் இறந்துபட்டதை எண்ணி உள்ளம் வெதும்பி அழுகின்றாள்.

         மேலும், கன்னன் பாண்டவர் ஐவரையும், துரியோதனாதியர் நூற்றுவரையும் தம்பியராக அடையும் பேறு பெற்றவன். இவர்கள் அவன் ஆணைப்படி ஒழுக வேண்டியவர்கள். உலகினை ஒரு குடைக்கீழ் ஆளும் நிலையினை எய்தியவன். இத்துணைச் சிறப்புகள் அவன் அடைந்திருந்தும் விதியின் வலியினாலும் கடவுளர் மாயத்தினாலும் அழிவுற்றனவே என அரற்றுகின்றான். முன்னர் கன்னன் குந்தியிடமிருந்து பெற்ற வேண்டுகோளின்படி அவள், அவனை எடுத்தணைத்துத் தன் மகனெனக் கூறிக் கதறுகின்றாள்.

          குந்தியின் நிலை மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். முதன் முதலாகத் தான் பெற்ற கன்னனை மகனென்று வெளியே கூற முடியவில்லை. பின்னர்ப் பெற்ற பாண்டவருள் அருச்சுனனுக்குக் கன்னனால் இடர் வருவதனையும் கண்ணன் வாயிலாக அறிந்திருந்தாள். அருச்சுனனால் கன்னனுக்கு ஏதம் வருதலையும் அவள் அறிவாள். தனக்குப் பிறந்த மக்களே ஒருவருக்கொருவர் பகையான தன்மை கண்டு உள்ளம் நோகின்றாள். இந்நிலையில் கன்னனின் இழப்பு அவளுக்குப் பெருந்துன்பத்தை உண்டாக்குகின்றது.

          கன்னன் அனைவருக்கும் மூத்தவனாகையால் ஐவரும் நூற்றுவரும் தனக்குப் பணிவிடை செய்ய வாழ வேண்டியவன். கன்னன் தன் மகன் என்று குந்தியறிந்தும், அதனை வெளியிட முடியாத சூழலில் துன்பமுற்றாள். எல்லா நலன்களையும் எய்தியிருந்த கன்னன் இழப்பிற்குக் குந்தி கூறும் காரணம் விதியின் வலிமையும் கடவுளர் மாயமுமேயாகும். இங்குக் கடவுளர் மாயமென்பது குறிப்பாக்க் கண்ணனைச் சுட்டுகின்றதெனலாம். எனவே குந்தி தன் மகன் கன்னன் இறப்பிற்கு மேற்குறித்த இரு காரணங்கைக் கூறிப் புலம்புகின்றாள். போர்க்களத்தில் பெரு வீரனாகக் கன்னன் இறந்தாலும், அவனைப் பெற்ற தாய் அவன் இழப்பிற்காக ஏங்கியழுவது நம்முள்ளத்தை உருக்குகின்றது.

பார்வை நூல்

1.  தமிழ்க் காப்பியங்களில் அவலச்சுவை – முனைவர் அ.கோபிநாத், இந்திரா பதிப்பகம், திருச்சி -620 005.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...