Skip to main content

கீழடிப் புதையல்

  கீழடிப் புதையல்  இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை   உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக்   கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம்   குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...

வேளாளர்

வேளாளர்

        வேளாளர் என்பவர் உழுதுண்பார், உழுவித்துண்பார் என இருபிரிவினராயிருந்தனர். இவருள் உழுதுண்பார் உழுவித்துண்பாரினும் தாழ்தோராகக் கருதப்பட்டனர். உழுவித்துண்ணும் வேளாளர் பிறரை ஏவி வேலைக் கொள்ளும் தன்மையர்.

          வேளாளரே உயர் வகுப்பினராவர். அவர்களே நாட்டின் உயர்குடிப் பெருமக்கள் அல்லது நிலக்கிழார் மரபினராயிருந்தனர். இவர்கள் வெள்ளாளர் என்றும் காராளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

          சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் தமிழக வேளிர்களில் பெரும்பாலானவர்களும் வேளாளர் மரபைச் சேர்ந்தவர்கள். சிறிதளவே நிலமுடைய ஏழை வேளாளர் குடியினர் ‘வீரகுடிவழவர்’ என்று அழைக்கப்பட்டனர். மற்ற வேளாளர்கள் செல்வக் குடியினர் என்பது தெரியவருகிறது.

          வடுக நாட்டை வென்ற வேளாள குடியினர் ‘வேளமர்’ என்று அழைக்கப் பெற்றனர். இன்றும் அங்குள்ள பெருநிலக்கிழார்கள் அனைவரும் பெரும்பாலும் இவ் வேளமர் வகுப்பினர்தான்.

          பிளைனி, தாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத் தீரத்திலுள்ள வல்லமை வாய்ந்த ‘கங்கரிடே’ என்ற குடிமரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டமையால் வேளாளருக்கும் கங்ககுலம், கங்கவமிசம் என்ற பெயர் உண்டு.

          நச்சினார்க்கினியர் மேல்நிலை வேளாளர், கீழ்நிலை வேளாளர் என்று இருப்பிரிவினரைக் குறிப்பிடுகின்றார். மேல் நிலை வேளாளருக்கு அரச குலங்களோடு மண உரிமை உண்டு.

          உயர் வேளாளர் உயரிய நிலைகளை வகித்தனர். அவர்கள் மண்டலத் தலைவர், பிராந்தியத் தலைவர், மற்றும் தண்டத்தலைவர், ஆகிய பொறுப்புகளை வகித்தனர். அவர்கள் பிடவூர், அழுந்தூர் (சோழன் உருவப் பஃறேர் இளஞ்செட்சென்னி அழுந்தூர்க் குடும்பத்தில் மணமுடித்தவன்), நாங்கூர் (சோழன் கரிகாலன் நாங்கூர்வேள் குடும்பத்தில் மணந்தான்), ஆலஞ்சேரி(ஆலஞ்சேரி மயிந்தன் ஒரு பெருவள்ளல்), பெருஞ்சிக்கல், வல்லம், கிழார் முதலிய ஊரினர். இவ்வேளாளர்களுக்கு அரச குடும்பத்தோடு ஏற்பட்ட மண உறவினால், மிக உயர்ந்த அரசப் பொறுப்புக்களை ஏற்றனர். அதனால், சமூக அமைப்பில் மிக உயரிய இடத்தையும், பொருளாதார அடிப்படையில் வியக்கத்தக்க நிலையையும் அடைந்தனர்.

பார்வை நூல்

1.  சங்கப் புற இலக்கியங்களில் சமூகச் சித்திரிப்புகள் – முனைவர் நா.பழனிவேலு, தமிழ் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, மனோன்மணி பதிப்பகம், 18, பி.டி.வி. காலனி, கிருட்டிணகிரி. 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...