Skip to main content

பரசுராமன்

 

பரசுராமன்

 

         சிரஞ்சீவிகள் எனப் போற்றப்படுபவர்களுள் ஒருவர் பரசுராமன். இவருடைய தந்தை ஜமதக்கினி முனிவர். தாயார் ரேணுகா தேவி. கற்பில் சிறந்த ரேணுகா தேவி, நீரில் தெரிந்த கந்தவர்னின் அழகை வியந்தமையால், வெறும் மணலால் குடத்தைப் பிடிக்கும் தன் கற்பின் வலிமையை இழந்தாள். கோபமுற்ற ஜமதக்கனி தன் புதல்வர்களை அழைத்து தாயை வெட்டி வருமாறு உத்தரவிட்டார். பரசுராமனின் தமையர்கள் அவ்வாறு வெட்ட மறுத்து தந்தையின் சாபத்தை பெறுகின்றனர்.

          பரசுராமர் தந்தையின் கட்டளையை ஏற்றுத் தாயை வெட்டினார். மனம் மகிழ்ந்த தந்தை வேண்டும் வரத்தைக் கேள் என்றார். தன் தாய் உயிர் பெற வேண்டும் என்றும் தமையர்கள் சாபம் நீங்க வேண்டும் என புத்திசாலித்தனமாக வரம் கேட்டு, தாயையும், தமையன்மாரையும் பெற்றார் பரசுராமர்.

          அதன் பின்னர் தந்தையிடம் விடைபெற்று சிவபெருமானை நோக்கி தவம் செய்யப் புறப்பட்டார். அவர் சென்ற பின் அவருடைய பகைவனாகிய அரசன் கார்த்தவீரியன் ஜமதக்கினியையும், ரேணுகா தேவியையும், மற்ற பிள்ளைகளையும் கொன்றான்.

          வரம் பெற்றுத் திரும்பிய பரசுராமர் நடந்தமை அறிந்து சினம் கொண்டார். தன் குடும்பத்தை அழித்த கார்த்தவீரியன் தலைமுறைகளைக் கொன்று பழி தீர்ப்பதாக சபதம் எடுத்தார். அதனை நிறைவேற்றினார்.

          தலை சிறந்த குருவாக தவ சக்திகளை பெற்றிருந்த பரசுராமர், பீஷ்மர், கர்ணன், போன்றோர்க்கு ஆசிரியராய் திகழ்ந்தார். இவ்வாறு ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழிக்கு இலக்காய் திகழ்ந்த பரசுராமர் திகழ்ந்தார்.

பார்வை நூல்

1.   இலக்கியப் புதையல் – டாக்டர் க. இந்திரசித்து, ரேவதி பதிப்பகம்,

     சென்னை -600 017

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...