Skip to main content

எழுதுகோல் கனவுகள் (புத்தக மதிப்புரை)

  எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை )         புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் .  இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் .          கவிஞர் மலர் மன்னன்   அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .         இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...

கடு சர்க்கரைப் படிமம்

 

கடு சர்க்கரைப் படிமம்

வைணவக் கோவில்களில் நின்று அமர்ந்த கிடந்த கோலத்தில் உள்ள கருவறைப் படிமங்கள் சுதை அல்லது கடுசர்க்கரையால் ஆனதாக இருக்கும். இப்படிமங்கள் மிகவும் நேர்த்தியாகவும் அழகுடனும் கூடியவை. இத்தகு படிமங்களுக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு செய்வர்.

சிற்பக் கலைஞர்கள் கடுசர்க்கரையக் கண்ட சர்க்கரை  என்றும் கூறுவர். கடினமான சுக்கான் கற்களைப் பொடித்துக் கிடைக்கும் சிறு மணலையும், மண்ணையும் பலவகையான மூலிகைகளின் சாற்றையும் கலந்து தயாரிக்கப்படும் சாந்து கடுசர்க்கரை எனப்படும். கடு சர்க்கரைச் சாந்தை மரச்சட்டத்தில் பூசி உருவாக்கப்படும் படிமம் கடுசர்க்கரை படிமம் எனப்படும். இதைத் தயாரிப்பதற்கும் பல கட்டங்கள் உண்டு.

படிமத்தின் அளவை தீர்மானித்த பின் மரச் சூலக் கூடி தயாரிப்பது முதல் கட்டம். இந்தக் கூட்டின் மேல் கயிறு அல்லது தாமிரக் கம்பியைக் கட்டுதல், அதன் மேல் எட்டுவிதக் கலவைக் குழம்பைப் பூசுதல் அதன் பின் கலவைச் சாந்தைப் பூசி படிமத்தை உருவாக்குதல் வர்ணம் பூசுதல் என ஆறு கட்டங்களாக கடுசர்க்கரை படிமம் தயாரிக்கப்படும்.

பார்வை நூல்

1.  தமிழர் கலையும் பண்பாடும் – அ.கா.பெருமாள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 014.

Comments

Popular posts from this blog