Skip to main content

ஏழு சுரங்கள்

 

ஏழு சுரங்கள்

        குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன ஏழு சுரங்களாகும். இவை தற்போது சட்ஜம், ரீடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்று வழங்கப்படுகின்றன. இவற்றின் முதல் எழுத்துக்களை சரிகமபதநி என்பர். இவை ஏழும் நிறைந்தது பண் என்றும் இவற்றில் குறைந்து வருவது திறம் என்றும் பெயர் பெறும். நெட்டெழுத்துக்கள் ஏழும் ஆலாபனையில் பயன்பட்டனவாம்.

1.  தாரம்

          இது மெய் எழுத்தாய ‘க’ என்ற குறியீட்டெழுத்து உடைமையால் காந்தாரம் எனப்பட்டது. இதுவே முதல் இசையாகும். காந்தர்வம் இன்பத்திற்குக் காரணமாக இருப்பது போது இவ்விசை இயல்பாக இக்காலத்துத் தம்பூர் என்ற கருவியிலும் முறை சுருதி சேர்க்கப்பட்டால் ஒலிக்கின்ற ஒலித்தன்மையில் உள்ளீடாகக் கேட்கப்படுவது.

2.  குரல்

தமிழ் மரபில் ஓரிசை ஈரிசை மூவிசை என்ற பகுப்பு அமைதியில் இரண்டாம் இசையாய குரல் எனும் இவ்விசை மகளிர் குரலை ஒத்தது எனப்படும் நடுவான இடத்தைப் பெற்றிருப்பதால் இது மத்திமம் எனவும் கூறப்படும்.

3.  துத்தம்

இது தொந்தம், துருத்தி என்ற சொற்களைப் போன்று முன்னுள்ள எல்லை, பின்னுள்ள எல்லை, ஆகியவைகளின் அளவு ஒத்திருக்க நடுநின்றமையால் துத்தம் எனப்பட்டது. இனி முறையில் ஐந்தாவதாக நிற்பது கருதிப் பஞ்சமம் என்று பகரப் பெறுவதும் வழக்காயிற்று.

4.  கைக்கிளை

இசை வகையில் சிறியகிளை என்ற பொருளில் இக்கைக்கிளைப் பெயர் காரணப் பெயராக எழுந்துள்ளது. இதன் குறியீட்டெழுத்து ‘த’ ஆனதால் அவ்வெழுத்தினைத் தழுவி வருவது பற்றித் தைவதம் எனக் கூறப்பெறுவதும் உண்டு.

5.  உழை

உழை என்ற சொல் இடத்தது என்று பொருள் பெறும். குழலிலும் யாழிலும் இடக்கையால் இசைக்கப்படுவது குறித்து இச்சொல் வழங்கி வந்தது என்றும் கூறலாம். இதன் குறியீட்டெழுத்து ‘நி’ ஆனதால் நிசாதம் என்று கூறும் பழக்கமும் பிற்காலத்தில் எழுந்தது.

6.  இளி

இதற்கு அடிமணை, இசை, பட்ட்டை என்னும் பெயர்கள் உண்டு. ஆறுபிறப்பிப்பது என்றும் ஆறாவது என்றும், ஆறு நிலைகளின் வழி வருவது ஆதலாலும் சட்ஜம் என்று கூறப்பட்டது.

7.  விளரி

ஒரு நிரலாக உள்ள ஒரு தொகுதியை நிறைவு செய்கின்ற ஒன்றினுக்கு விளரி என்று பெயர். இது இகர விகுதி பெற்று இறுதி இசை என்ற பொருளில் இரிஷபம் எனக் கூறப்பெற்றது.

இக்காரணங்கள் யாவும் தமிழ்மரபை ஒட்டியனவாகும். எந்த மரபைக் கொண்டு காரணம் கற்பித்தாலும் ஒலிவகைகளான இவற்றிற்குப் பொருந்தும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தமிழ் இலக்கண வழக்கு.

பார்வை நூல்

1.  சி.சுப்பிரமணியன் – சங்க இலக்கியம் சில பார்வைகள், பாரி புத்தகப் பண்ணை, சென்னை-600 108.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...