Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

நெல்லி

நெல்லி

நெல்லி மரத்தைப் பற்றிச் சங்க நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. நெல்லி மரத்தைப் பாலைத் திணைக்குரியதாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. நெல்லி மரம் வறட்சியான சூழ்நிலையில் வளரக் கூடியதென்பதைச் சங்கப் புலவர்கள் நன்கு உணர்ந்திருந்தனரென்பது விளங்குகின்றது.

விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்

அந்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்” (அகம்,241)

நெல்லி நீடிய கல்லறை கவா அன்”   (அகம்,385)

புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்

 கல்லதர் மருங்கிற் கடுவளி யுதிர்ப்ப”   (அகம்,363)

நெல்லி நீடிய கல்காய் கடத்திடை” (ஐங்குறுநூறு,334)

நெல்லி மரம் வறண்ட இலையுதிர் காடுகளிலும், 4,500 அடிவரை உயரமான குன்றுச் சரிவுகளிலும் இயற்கையில் வளர்வதாகச் செடிநூலார் கூறுவர்.

          நெல்லிக்காயைத் தின்றதனால் மற்ற உணவை உண்ணத் தயங்கும் பற்கள் என்று சொல்லியிருப்பதை ,

          பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்

        புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்

        நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி” (அகம்,54)

        ”சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்

        விழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று

        வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த”(நற்றிணை,271)

நெல்லிக்காயைத் தின்னும் போது புளிச்சுவை தெரியும். ஆனால், தின்றவுடன் நீர் அருந்தினால் வாயில் இன்சுவை தோன்றும். இதையே மேற்காட்டிய சங்கப் பாடல்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் நீர் வேட்கையைத் தணிக்கும் தன்மையுடையவை,

          ”குறும்பொறை மருங்கிற் கோட்சுர நீந்தி

          நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்

        செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி” (அகம்,271)

பாலையில் நெடுவழி நடந்தவர்க்கு நீர் வேட்கையால் உயிர் போகாதிருக்க நெல்லிக்காய் உதவியதாகக் கூறியதைக் காணலாம். உண்ணும் நீர்போல் உதவி நீர் வேட்கையைத் தணித்ததால் ”அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்” என்று நற்றிணை கூறுகின்றது.

          நெல்லியின் காயைப் புறாவும் வௌவாலும் உண்பதாகச் சங்கநூல்கள் கூறுகின்றன.

          ”புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக்

        கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்” (அகம்,315)

        ”நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை

        நெல்லி யம்புளி மாந்தி யயலது”(குறுந்தொகை, 201)

புறா உண்டதாகக் கூறியது அரிய செய்தியாகும். வௌவால் விரும்பி உண்டதாகக் கூறியது அறிஞர்கள் கண்டறிந்த செய்தியாகும்.

          நெல்லி மரத்தைத் தோட்டத்திலும் விட்டு முற்றத்திலும் வேலியிலும் வளர்த்து வந்த்தை சங்க நூல்கள் கூறுகின்றன. ”நெல்லி வேலிப் பரலுடை முன்றிலங்குடிச் சீறூர்” என்று புறநானூறு கூறுகின்றது. வீட்டைச் சுற்றி நெல்லி மரத்தை இன்றும் சிற்றூர்களில் வளர்ப்பர். நெல்லக்காயின் விதை கல்போல் உறுதியாக இருக்கும். அவ்விதையைப் பரல், என்றும் புன்காழ் என்றும் கூறுவர்.

          ”பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட

        சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா” (புறம், 91)

        ”ஆர்வ நன்மொழி யாயு மால்வரைக்

        கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி

        யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த” (சிறுபாண், 99,101)

அதியமான் ஔவைக்குத் தான் அரிதாகப்பெற்ற சாகா மருந்தான கருநெல்லிப் பழத்தைக் கொடுத்தக் கதையைப் புநானூறும், சிறுபாணாற்றுப்படையும் கூறுகின்றன. இயற்கையில் அத்தகைய குணமுடைய கருநெல்லிக்கனி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நெல்லிக்காய் நிறைய மருத்துவச் சத்துடையது.

அரிநெல்லி

          இதன் குடும்பத்தைச் சேர்ந்த அரிநெல்லி என்றொரு மரமும் உண்டு. இதன் கனியும் உண்பதற்குப் பயன்படும். அரிநெல்லி சங்க நூல்களில் கூறப்படவில்லை.  அரிநெல்லிக்கனி இந்திய நாட்டிற்குச் சொந்தமன்று. மலேயாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. தற்காலத்தில் அரிநெல்லியிலிருந்து பிரித்துணர்வதற்காக்க் காட்டு நேல்லி என்றும், பெரு நெல்லி என்றும் சங்க காலத்தில் வழங்கிய நெல்லியை அழைக்கின்றனர். அரிநெல்லியைச் செடிநூலார் `Phyllanthus Acidus’ என்பர்.

பார்வை நூல்

1.   கழக வெளியீடு – சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி – 6. 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...