சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக... சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது. மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...
ஆ தீண்டு
குற்றி
பசுக்கள் தம் உடம்பில் தோன்றும் தினவை இதமாக
உராய்ந்துச் சுகமாகத் தணித்துக் கொள்வதற்கு வசதியாக, அவை மேயும் மந்தை வெளியில் ஒரு
நீண்ட கருங்கல்லை நட்டு வைப்பார்கள். இக்கல்லை ‘ஆ தீண்டு குற்றி’ அல்லது ‘ஆ தீண்டு
கல்’ அல்லது ‘ஆ உறிஞ்சி தறி’ என்று அழைத்தனர்.
இதனை நாட்டுவது மிகச் சிறந்த தருமச் செயலாக மதிக்கப்பட்டது. பசுக்களின் தினவைத் தணித்துக்
கொள்வதற்கும் ஒரு தருமச் செயல் ஆகும்.
பார்வை நூல்
1.
இலக்கியங்களில்
வழிபாடுகள் – டாக்டர்.டி.செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை 600 004.
Comments
Post a Comment