Skip to main content

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

ஆவணி அவிட்டம்

 

ஆவணி அவிட்டம்

          பூணூலை வருடத்திற்கு ஒரு மாற்றுவதற்காக ஏற்பட்ட பண்டிகையே ஆவணி அவிட்டம். அதாவது தாலி பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள். ஒருவனுக்கு உரிமையானவள் என்பதையே உணர்த்துகிறது. இத்தாலி அன்றும் இன்றும் வடிவங்கள் வந்துள்ளதே தவிர, கழுத்தில் ஏதோ ஒரு வடிவில் இருந்திருக்கிறது.

         எனவே தாலி என்பது பெண்களின் கழுத்தில் இருந்து அவர்களை அடையாளங் காட்டிற்றோ அதே போல் ஆடவரையும் பல்வேறு நிலைகளில் இனங்காட்டிட இந்தப் பூணூல் அணியப்பட்டது.

          தாலி அணிந்த பெண்கள் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்னும் எல்லை வகுத்த்தோ, அதே போல் பூணூல் அணிந்தவர்கள் பிறரிடம், பிறர் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதே இப்பூணூலின் முதற் பெருமை.

          நம் முன்னோர்கள் விருந்தோம்தலில் மிகவும் விருப்பம் உடையவர்கள். அதே சமயம் வாணிபம், கல்வி, தூது, நிமித்தமாக ஊர்விட்டு ஊருக்கும், நாடு விட்டு நாட்டிற்கும் அந்நாளில் செல்வது அவசியமாயிருந்தது.

    தலைவன் இல்லத்தில் இல்லை என்று தலைவி விருந்தினருக்கு விருந்தளிக்காமல் இருக்கமாட்டாள். தலைவனில்லாத அவ்வேளையில் விருந்தாளியை உடனே வீட்டிற்குள் வருகை தரும்படி வரவேற்கவும் மாட்டாள். சன்னல் வழியாகவோ அல்லது கதவு இடுக்கின் வழியாகவோ ஒரு கணம் நோக்குவாள். விருந்தாளியின் உடலில் பூணூல் இல்லையென்றால் வாலிபத்தின் தலைவாசலை அவன் இன்னும் மிதிக்கவில்லை என்று உணர்ந்து அவனைத் தமது தம்பியாகக் கருதி உபசரிக்க முற்படுவாள்.

          அவ் விருந்தாளியும் ஒற்றை வடத்தில் பூணூல் அணிந்திருந்தால் வாலிபன் என்றும் மணமாகதவன் என்றும் கண்டுணர்ந்து அதற்கேற்ற எல்லையிலிருந்து அவனை உபசரிப்பாள்.

          விருந்தாளியின் மேல் இரட்டை வடப் பூணூல் காணப்படுமானால், அவன் திருமணம் நிகழ்வுற்றவன், தங்கைக்கும் தாரத்துக்கும் வேறுபாடு கண்டுணர்ந்து மாண்புடன் நடப்பவன் என்றும் உணர்ந்து அவனை தமது மூத்த சகோதரனாகக் கருதி உபசரிப்பாள். விருந்தாளியிடம் மூன்று வடம் பூணூல் காணப்பட்டால் அவரைத் தந்தைக்கு சமமாகக் கருதி உபசரிப்பாள்.

          இத்தகைய நுண்ணறிவுக்கும் முன்னறிவுப்புக்கும் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பூணூல் தரிக்கும் வழக்கத்தையே கடைபிடித்தார்கள்.

   எந்த வகுப்பினரையும் பிரித்துக்காட்டுவதற்காகவோ, பாகுபடுத்திக் காட்டுவதற்காகவே முன்னோர்கள் பூணூல் தரிப்பதை ஏற்படுத்தவில்லை.

          பிராமணர்கள் மட்டும் பூணூல் தரிக்கும் பழக்கத்தை ஏகபோகமாக ஆக்கிக் கொள்ளவில்லை. சத்திரியர்களும், வைசியர்களும் தரித்து வருகிறார்கள்.

          பூணூல் அணிபவர்களை இரு பிறப்பாளர் என்று கூறுவதுண்டு. பூணூலை இருபிறப்பாளர் தம் கடிகை என்கிறார் பரிமேழகர். உபநயனம் என்றால் மேலும் (உப) கூடுதலாகவும் கண்களைப் பெறுதல் என்றே பொருள்.

          ஆவணி அவிட்டத் திருநாளுக்கு அடுத்த நாள் வரும் காயத்ரி ஜெபம் உன்னதமானது. இம் மந்திரத்திலுள்ள 24 எழுத்துக்களும் எல்லா தேவதைகளையும் சுட்டி நிற்பதால் அனைத்துத் தேவதைகளின் அருளையும் பெறுவதற்கு இது உரியதாகிறது.

          மேலும், இந்நோன்பிற்காகச் செய்யும் கொழுக்கட்டை (உப்பு) சிவ அம்சத்தையும், கார அடை (தித்திப்பு) சக்தி அம்சத்தையும் குறிக்கிறது. கணவனுக்கு அடையையும் மனைவிக்குக் கொழுக்கட்டையும் வழங்குவதன் உட்பொருள் என்னவென்றால், இல்லற வாழ்வில் இருவரும் இணைந்தொளிர வேண்டும் என்பதே ஆகும்.

          ”உருகாத வெண்ணெயும்

           ஓரடையும் நான் வைத்து

           ஒரு நாளும் என் கணவனைப்

           பிரியாமல் இருக்க வேண்டும்...”

என்று இந்தியத் திருநாட்டின் பல பாகங்களிலும் பெண்கள் இவ்வேண்டுதலைக் கூறி தமது கரங்களிலும் மஞ்சள் சரசு அணிந்து கொள்கிறார்கள்.

         ஈசுவரனைப் பிரிந்திருந்த அம்பாள் ஒரு சமயம் அஞ்ஞானத்திற்கு உள்ளானாள். பிறகு பூசை செய்தாள், நிவேதனம் செய்தாள். அதன் பின்பு ஈசுவரனை அடைந்து இன்புற்றாள்.

          இந்த விரதத்தை அம்பாள் மேற்கொண்டது மாசியும் பங்குனியும் கூடும் சமயத்தில். அதன் காரணம் கருதியே பெண்கள் இந்நோன்பை அதே திங்களில் கொண்டாடி மங்கல மங்கையாராகத் திகழந்திட ஆண்டுதோறும் பராசக்தியைப் போற்றி வணங்குகிறார்கள்.

பார்வை நூல்கள்

1. பண்டிகை தரும் பண்பாடு - திருமதி கோ. சாந்தகுமாரி, எழில் நிலா பதிப்பகம், மயிலை, சென்னை -4.

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...