Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

மனம்

 

மனம்

          மனித மனம் மிகவும் விசித்தரமான போக்கினைக் கொண்டது. அதனால்தான் மனிதன் விலங்குகளிலிருந்து மாறுபட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயலாற்றுகின்றான். ‘நினைவாற்றல்’ (Memory power) என்பது மனிதனுக்குக் கிடைத்த பெரும்பேறாகும். நினைவாற்றலின் துணைகொண்டே மனிதமனம் இயங்குகின்றது. ‘மனம்’ எது என்பதை வரையறுப்பதில் அறிஞர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சிலர் ‘மூளை’ என்பதே மனம் என்கின்றனர். சிலர் ஆத்மா வே மனம் என்கின்றனர். ஆன்மா என்பதும் ஆத்மா என்பதும் ஒரே பொருளைத்தான் தருகின்றது. ”ஆன்மாக்களுக்கு மறுபிறப்பு உண்டென்ற கருத்து வேதங்களின் வெளிப்படையாகக் காணப்படவில்லை. ஆனால் உடல் அழியும் ஆன்மா அழிவதில்லை. ஒருவன் இறந்தாலும்  அவனுடைய ஆன்மா, அவன் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப மோட்சத்திற்கோ நரகத்திற்கோ செல்லும் என்ற கருத்துக்கள்” ஆன்மாவைப் பற்றி நிலவுகின்றன.

          மனித மனத்தை உளவியலார் நனவு மனம், நனவிலி மனம் என இரண்டாகப் பிரிப்பர். மனிதனின் செயற்பாடுகளுள் பெரும்பான்மையும் நனவிலி மனத்தால் இயக்கப்படுகின்றன. நரம்புதளர்ச்சி நோயைக் குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பிராய்டு, நனவிலி மனம் பற்றிய பல புதிய உண்மைகளைக் கண்டறிந்தார். அவற்றுள் ஒன்றே ஹிப்னாட்டிசம் என்பதாகும். இது ஓர் அறிதுயில் முறையாகும். இம்முறையில் நோயாளியைத் தூங்கச் செய்யும் போது அவனது அகமனச் செயற்பாடுகள் பலவற்றைக் கண்டறிய முடியும் என்றார் பிராய்டு.

          மனம் ஒரு குரங்கு (Mind is a monkey). அது ஒரு கற்பனைக் குதிரைப் போன்றது. அது தன் விருப்பம் போல எண்ணங்களையும் ஆசைகளையும் நினைத்துக் கொண்டே இருக்கின்றது. நிறைவேறாத ஆசைகள் மனிதனின் அடிமனத்தில் சென்று தேங்குகின்றன. அடிமனத்திலுள்ளவைகளை ஒருவன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருக்க முடியாது. அது அவனை அறியாமலேயே சில சமயங்களில் வேற்று வடிவத்தில் வெளிவர முயலுகின்றன. அவை ஈட் (ID) என்னும் தூண்டுதலினால்    (Induvidual Desire) வெவ்வேறு வடிவங்களில் தம்மை வெளிக்காட்டத் துடிக்கின்றன. சில நேரங்களில் கவிதைகளாகவும், கனவுகளாகவும், சிறுகதை வடிவிலும் அவை வெளிப்படுகின்றன. பொய், கேலிப் பேச்சு போன்ற செயற்பாடுகளாகவும் அவை சமயத்தில் அமையும்.

மனத்தை மேல்மனம், நடுமனம், அடிமனம், என்றும் மேலும் வகைப்படுத்தலாம். இவற்றுள் அடிமனம் என்பதே பிராய்டு குறிப்பிடும் நனவிலி மனம் ஆகும், அடிமனத்தை `id’ என்னும்   தூண்டல் `Ego’ என்னும் ஆணவம் (தான், மமதை),     `Super Ego’ என்றும் மனச்சான்று (Conscience) ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையன.  `id’  என்பது குழந்தை மனம் போன்றது. அது விரும்பியதை எல்லாம் அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. ஈட்டின் விருப்பங்களை ஈகோ பூர்த்தி செய்கிறது. ஆனால் `Super Ego’  வின் அனுமதி பெற்றுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளது. மனிதன் பலவீனமான மனப் போக்கைக் கொண்டவன். நாட்டின் பல்வேறு குற்றவாளிகளையும் மனநோயாளிகளையும் பார்க்கும்போது, அவர்கள் அவ்வாறு மாறியதற்குக் காரணம், அவர்களது அடிமனத்திலுள்ள ‘ஈட்’ என்னும் தூண்டலுக்கும் `Ego’ என்னும் ஆணவத்திற்கும் (தான்) இடையே ஏற்பட்ட போராட்டமும் அதன் முடிவில் ஈட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

பார்வை நூல்

1.   கருப்பத்தேவன்.உ.முனைவர் – தமிழும் பிற துறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை -600 050, பதிப்பு ஜீலை 2019.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...