Skip to main content

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

தமிழர் சடங்குகள்

 

தமிழர் சடங்குகள்

          கற்பு மணத்திற்கென்று உண்டாக்கப்பட்ட சடங்குகள் எவை? அவை இன்றைய திருமணங்களில் நடைபெறும் சடங்குகள் போன்றவைகளா? அல்லது வேறு வகையா? இன்றைய திருமணச் சடங்குகள் வேத முறைப்படி நடைபெறுவன என்பர். தீயின் முன் வடமொழி மந்திரங்களுடன் நடைபெறுவன இன்றைய சடங்குகள்.

          பண்டைத் தமிழர் திருமணச் சடங்குகள் வேதத்தைப் பின்பற்றியன அல்ல. தீ வளர்த்து அதன் முன்னர்த்  திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததில்லை. திருமணச் சடங்குகளைச் செய்து வைத்தற்கென்று குருமார்களோ புரோகிதர்களோ இருந்தார்கள் என்று எண்ணவும் இடமில்லை. தமிழர்களுடைய சடங்குகளில் அக்கினிக்கு இடமில்லை. தொல்காப்பியத்திற்குப் பின்னே தோன்றிய சங்க இலக்கியங்களில் கூட அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் சிறுபான்மையாகத்தான் காணப்படுகின்றன.

          தமிழர்களிடம் நடைபெறும் சடங்குகள் எல்லாம் பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுவனவே. இன்றும் பருவம் வந்த பெண்களுக்கு நடத்தப்படும் சடங்கு, கருவுற்ற மகளிர்க்கு நடத்தப்படும் வளைகாப்பு போன்றவை பெண்களாலேயே நடத்தப்படுகின்றன. இவைகளில் ஆண்கள் தொடர்பில்லை. இச்சடங்குகளில் புரோகிதமும் இல்லை. இவைகளைப் போலவே திருமணச் சடங்குகளும் நடைபெற்றன. தமிழர் திருமணச் சடங்கு முறைகளைப் பற்றி அகநானூற்றில் இரண்டு பாடல்களில் கூறப்பட்டுள்ளன. 86 , 136 –ஆகிய இரண்டு பாடல்களிலும் இவைகளைக் காணலாம்.

       நல்ல நாளிலே குளிர்ச்சியான திருமணப் பந்தலிலே புதுமணல் பரப்பப்பட்டது. பந்தலிலே பூமாலைகள் புனைந்து தொங்கவிடப்பட்டன. இரவு கழிந்து காலை நேரம் எழுந்தது. மணப்பந்தலிலே வரிசை வரிசையாக விளக்குகள் ஒளிவீசிக் கொண்டிருந்தன. வயது நிரம்பிய பெண்கள் தங்கள் தலைகளிலே நீர்க் குடங்களைச் சுமந்து நின்றனர். பிள்ளை பெற்ற பெண்கள் நால்வர் அந்த நீர்க் குடங்களை வாங்கி மணமகளை நீராட்டினர். நீராட்டும்போது ”இவள் கற்பு நெறியிலே தவறாமல் வாழ்க! தன் கணவனுடன் அன்புக்குரிய மனைவியாகுக” என்று வாழ்த்துக் கூறினர். பின்னர் பெற்றோர் ”நீ சிறந்த இல்லக் கிழத்தியாகுக” என வாழ்த்தி அவளை மணமகன் கையிலே மகிழ்ச்சியுடன் கொடுத்தனர்.

          திருமண வீட்டிலே பெரிய சோற்றுக் குவியல் இருந்த்து. திருமணம் முடிந்தபின் அனைவரும் அச்சோற்றுக் குவியலை உண்டு உள்ளம் களித்தனர். இது அகநானூற்றில் 86 – வது பாடலில் காணப்படுகிறது. இத்தகைய திருமணச் சடங்கின் போது வாத்தியங்கள் முழங்கின. தெய்வத்தை வணங்கிப் பெண்ணுக்கு மலர் மாலையும், நல்லாடையும், நகைகளும் அணிவித்து அழகு செய்தனர் என்ற செய்தி 136 – ஆவது பாடலில் காணப்படுகின்றது.

          தொல்காப்பிய காலத் தமிழர் திருமண முறை ஒரு தனிமுறையாகும். இன்றுள்ள சடங்கு முறையும், புரோகிதர் முறையும் பண்டைத் தமிழர் கொண்டவையல்ல. இந்த உண்மையைத் தொல்காப்பியம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

பார்வை நூல்

1.  சிதம்பரனார்.தமிழறிஞர்.சாமி, மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் (தொல்காப்பியர் காலம்), நாம் தமிழர் பதிப்பகம்,சென்னை- 600 005,மார்ச் 2011.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...