Skip to main content

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

எண்வகை மணம்

 

எண்வகை மணம்


       வடமொழி நூல்களிலே மணம் எண்வகைப்படும் என்று சொல்லப்படுகின்றது. அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.

          பிரமம் – பெண் கொடுப்பதற்கு ஒத்த கோத்திரமுடையவன்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரம்மச்சரிய விரதங்காத்தவன்; இவனுக்குப் பருவமடைந்த பன்னிரண்டு வயதுடைய பெண்ணை, இரண்டாவது பூப்பெய்துவதற்கு முன் அணிகலன்களைப் பூட்டித் தானமாகக் கொடுப்பது.

        பிரசாபத்திய மணம் – மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் பரிசத்தைப் போலப் பெண் வீட்டார் இரண்டு பங்கு பரிசும் கொடுத்து மணம் செய்விப்பது.

       ஆரிட மணம் – காளையையும், பசுவையும் பொன் கொம்பும், பொன் குளம்பும் உடையனவாகச் செய்து அவற்றின் இடையிலே பெண்ணுக்கு நகைகள் பூட்டி நிறுத்தித் தக்கான் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பது.

         தெய்வ மணம் – பெரிய யாகங்களைச் செய்கின்றவர்களில் ஒருவனுக்கு அந்த யாகத்தின் முன்னே பெண்ணைத் தக்கணையாகக் கொடுப்பது.

       அசுர மணம் – கொல்லும் கொடுங்காளையைப் பிடித்து அடக்குதல், திரிகின்ற பன்றியை அம்பெய்து கொல்லுதல், வில்லை நாணேற்றுதல் முதலிய வீரச் செயல்களைச் செய்து பெண்ணைக் கொள்ளுவது, சுயம்வர மணமும் இவைகளில் அடங்கும்.

          இராக்கத மணம் – பலவந்தமாகப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் மணம் புரிந்து கொள்ளுவது.

      பைசாச மணம் – மூத்தவர்களையும், கள்ளுண்டு மயங்கினர்களையும், தூங்குகின்றவர்களையும் இழிந்தவர்களையும் மணந்து கொள்ளுவது பைசாச மணம்.

          கந்தருவ மணம் – கந்தவர்களிலே ஆண் பெண் இருவர் ஒருவரை ஒருவர் கண்டபோது காதல் கொண்டு இணைவர். அது போல ஒரு ஆணும் பெண்ணும் எதிர்ப்படும் போது காதல் கொண்டு மணமக்களாவது.

        இந்த எட்டு வகை மணங்களிலே தமிழரின் களவு மணம் கந்தருவ மணத்தைப் போன்றது என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

          ”காமக் கூட்டம் காணுங் காலை

           மறை ஓர் தேஎத்து மன்றல் எட்டனுள்

           துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (தொல்.பொ.க.1)

          ”காமக்கூட்டம் எத்தகையது என்று காணும் போது வேதத்தில் ஓர் புறத்திலே கூறப்படும் எண்வகை மணங்களிலேயே சிறந்த நல்ல யாழைத் துணையாகக் கொண்ட கந்தருவர்களின் வழக்கத்தைப் போன்றதாகும்”.

        வேதத்திலே கூறப்படும் மணமுறைகளைத்தான் தமிழர்கள் பின்பற்றினார்கள் என்று சொல்வதற்கு இடமில்லை. பின்பற்றி இருப்பார்களானால் களவு மணத்தைக் கந்தருவ மணத்திற்கு ஒப்பிட்டு உரைத்திருப்பதைப் போல, ஏனைய ஏழு திருமணங்களை ஒத்த திருமணங்கள் இவை இவையென்று தொல்காப்பியர் கூறியிருப்பார். இவ்வாறு அவர் எங்கும் சொல்லவில்லை.

          எனவே ஐந்திணை ஒழுக்கமாகிய களவு – கற்பு திருமணமும், கைக்கிளை மணம், பெருந்திணை  வாழ்வு இம் மூன்றும் தமிழர் வாழ்விலே நிகழ்ந்த இயற்கை நிகழ்ச்சிகள். இவை எந்த நாட்டிலிருந்தும் இந்த நாட்டில் குடிபுகுந்தவை அல்ல; எந்த சமூகத்தாரிடமிருந்தும் தமிழர்கள் கடன் வாங்கியமையல்ல; எந்த மொழிகளிலிருந்தும் தமிழ் மக்கள் கற்று கொண்டவைகளும் அல்ல; தமிழர் சமுதாயத்தில் தாமே தோன்றி நிலவிய இயற்கை மணவாழ்வாகும். இதுவே தொல்காப்பியக் கண்ணாடி நமக்குக் காட்டும் உண்மை.

பார்வை நூல்

1.  சிதம்பரனார்.தமிழறிஞர்.சாமி, மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் (தொல்காப்பியர் காலம்), நாம் தமிழர் பதிப்பகம்,சென்னை- 600 005,மார்ச் 2011.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...