Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

விக்கிரக வணக்கம்

 

விக்கிரக வணக்கம்

”கடவுள் எங்கும் நிறைந்தவர். அவருக்கு ஓர் உருவமும் இல்லை. உருவம் உள்ளவர் கடவுள் ஆகமாட்டார். ஆண்டவனுக்கு உருவம் வைத்து வணங்குவதை விட அறியாமை வேறொன்றுமில்லை”. என்று சில மதவாதிகள் கூறுகின்றனர். மதப்பற்றும், கடவுள் நம்பிக்கையும் உள்ள அறிஞர்களும் இதை ஒப்புக்கொள்கின்றனர்.

சித்தர்கள் என்ற பெயருடைய தமிழர்களும் உருவ வணக்கத்தை வெறுத்தனர். சித்தர்கள் என்றால் அறிஞர்கள் என்று பொருள். கல்லாலும், செம்பாலும், உருவம் செய்து வைத்துக் கடவுளை வணங்குவதிலே பொருளில்லை என்று என்று கூறியுள்ளனர்.

கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்

எங்கள் கண்ணுதலே?

          தமிழ் நாட்டிலும் உருவ வணக்கமுறை இருந்ததைத் தொல்காப்பியத்தால் அறியலாம். போலிலே வீரச் செயல் புரிந்து மறைந்து போன வீரர்களுக்குக் கல்நட்டு வணங்கும் வழக்கம் தமிழ்நாட்டிலே இருந்தது. வீரர்களின் நினைவுக் குறியாக நடப்பட்ட கல்லில் அவ்வீரர்கள் குடி கொண்டிருப்பதாகவே கருதினர். அந்தக் கற்களுக்குப் படையலிட்டு வணங்கி வழிபாடு செய்தனர். விழாவெடுத்துக் கொண்டாடினர். இது தமிழர்களின் பழமையாக வழக்கம். இந்த வழக்கமே தமிழ்நாட்டில் விக்கிரக வணக்கத்தை வளர்த்தது.

          இக்காலத்திலும் உருவம் செதுக்கப்படாத வெறுங்கற்கள் கடவுளர்களின் பிரதிநிதிகளாகக் காட்சியளிப்பதைக் காணலாம். தமிழ் நாட்டில் பல பகுதிகளிலே வெறும் கற்களை நட்டு, அவைகளுக்குக் காடன், மாடன், வீரன், சூரன் என்று பெயர் வைத்து வணங்கும் வழக்கத்தை இன்றும் பார்க்கிறோம். இது தமிழர்களின் பரம்பரை வழக்கம். இறந்த வீரர்களுக்குக் கல் நாட்டி வணங்கும் முறையைத் தொல்காப்பியம் விளக்கமாகக் கூறுகின்றது.

         காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்

        சீர்த்தகு மரபில் பெரும்படை, வாழ்த்தல் என்று

        இருமூன்று மரபின் கல்லொடு புணர” (தொ.பொ.புற.5)

      காட்சி – கல்லைத் தேர்ந்தெடுத்தல், கால்கோள் – அந்தக் கல்லை நடுவதற்கான ஆரம்ப விழாச் செய்தல், நீர்ப்படை – அந்தக் கல்லைத் தண்ணீரிலே போட்டுச் சுத்தம் செய்தல், நடுகல் – பிறகு அந்தக் கல்லை நடுதல், சீர்த்தகு சிறப்பில் பெரும்படை – மிகச் சிறப்பாகப் படைவீரர்கள் அந்தக் கல்லுக்கு மரியாதை செலுத்துதல், வாழ்த்தல் – எல்லோரும் கூடி அந்தக் கல்லிலே இறந்த வீரனுடைய ஆவி குடி கொண்டிருப்பதாக எண்ணி வாழ்த்து வணங்குதல்.

      தமிழர்கள் வெகு காலமாக வெறுங் கல்லை நட்டுத் தெய்வமாக வணங்கினார்கள். சிற்பத் தொழிலிலே தேர்ந்த பின் மாண்வர்களின் உருவங்களை மரத்திலும் கல்லிலும் செதுக்கக் கற்றுக் கொண்டனர். அந்த உருவங்களை வைத்துத் தெய்வமாக வழிபாடு செய்தனர். முதலில் மரத்தடியில் இவ்வுருவங்களை வைத்து வணங்கினார்கள். பிறகு அவைகளுக்குக் கோயில்கள் கட்டத் தொடங்கினர். உலகங் கண்டு வியக்கும்படி தமிழர்கள் சிற்பக் கலையிலே சிறப்படைந்த்தற்கு இந்த கல் நாட்டும் வழக்கம் காரணமாயிருந்தது.

          வீரர்களுக்குக் கல்நாட்டிக் கொண்டாடிய இந்த பழக்கத்திலிருந்து தான் பத்தினிப் பெண்டிர்க்குக் கல் நட்டு வழிபாடு செய்யும் முறை பிறந்தது. அறிஞர்களுக்கும் துறவிகளுக்கும் கல்நாட்டி வணங்கும் வழக்கமும் பிறந்தது. இன்று தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் எல்லாம் எண்ணற்ற பல கற்சிலைகள் காணப்படுகின்றன. வீரர்களுக்குக் கல் நாட்டும் வழக்கம் காரணமாக தமிழர்களின் சிற்பக் கலை சிறந்து வளர்ந்துள்ளது.

பார்வை நூல்

1.  சிதம்பரனார்.சாமி, மக்கள் வாழ்வும் ஒழுக்கமும், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை – 600 005.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...