Skip to main content

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

என்றும் இளமையாக இருப்பதற்கு....?

 

என்றும் இளமையாக இருப்பதற்கு....?

 

வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனைக் காண சென்ற பிசிராந்தையாரிடம், ஆண்டுகள் பலவாகியும் நரை நுமக்கு இல்லையே! – ஏன் என்ற வினாவுக்கு விடையாகப் பாடிய பாடல்.

பாடியவர் – பிசிராந்தையார்

புறநானூறு, பாடல் எண் – 191

துறை – பொதுவியல், பொருண்மொழிக் காஞ்சி

         யாண்டுபல வாக நரையில ஆகுதல்

        யாங்காகியர் என வினவுதிர் ஆயின்

        மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

        யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்

        அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை

        ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

        சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!

 

          வாழ்ந்து பல ஆண்டுகளாகி வயது முதிர்ந்த நிலையிலும் உமக்குத் தலை நரைக்காது இருக்கிறதே! இதற்கு என்ன காரணம்? என்று கேட்பீர்களானால், சொல்லுகிறேன், கேளுங்கள். பெருமை உடைய என் மனையாளுடன் என் பிள்ளைகளும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் நினைப்பது போலவே, தாங்களும், என்  குறிப்பறிந்து, வேலை செய்கிறவர்கள். என்னுடைய பணியாட்களும், நான் வாழும் நாட்டை ஆளும் அரசனும் யார்க்கும் தீங்கு செய்யாத நல்லவன். மக்களை அன்போடு காப்பவன். அதற்கும் மேலாகக் கல்வி கேள்விகளில் நிறைந்தும் மன மொழி மெய்களால் சிறந்தும் கொண்ட – உயர் கொள்கையாக உயிர் வாழும் அறிஞர் பெருமக்கள் பலர் என் ஊரில் வாழ்கின்றனர்.

Comments

Popular posts from this blog