Skip to main content

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

நல்லறம் ஒன்றே நற்றுணை!

 

நல்லறம் ஒன்றே நற்றுணை!

 

          நாடாண்ட புகழும் தேடிக் கொண்ட செல்வமும் உயிர்க்கு ஊதியமாகாது. செய்யும் நல்லறங்களின் பயனே இம்மைக்கும் மறுமைக்கும் இனிய துணையாகும்.

 

புறநானூறு – பா.எண், 357

பாடியவர் – புலவர் பிரமனார்

திணை – காஞ்சி

துறை – மறக்காஞ்சி, பெருங்காஞ்சி

        ”குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்

         பொதுமை சுட்டிய மூவர் உலகமும்

         பொதுமை இன்ற ஆண்டிசி னோர்க்கும்

         மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே

         வைத்த நன்றே வெறுக்கை வித்தும்

         அறவினை யன்றே விழுந்துணை அத்துணைப்

         புணைகை வீட்டோர்க்கு அரிதே துணையழத்

         தொக்குயிர் வௌவும் காலை

         இக்கரை நின்றியவர்த்து உக்கரை கொளலே”

        சிறு சிறு குன்றுகளையும், சிறு சிறு குன்றுகள் சேர்ந்த பெரிய மலைகளையும், தன்னோடு இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த மண்ணகம், எல்லோர்க்கும் பொதுவென்று சேர, சோழ, பாண்டிய மூவேந்தரும் தமக்கே உரியதென்று தனி ஆட்சி செலுத்தி வந்தார்கள். வாழ்ந்தார்கள். வாழ்ந்த அவர்கள் வாழ்நாட்களும் கழிந்தழிய, அவர்கள் சேர்த்த செல்வமும் அவர்களோடு போகவில்லை. அவர்களுடன் அவர்களுடைய மறுமைக்குத் துணையாக போவதெல்லாம், அவர்கள் செய்த நல்லறமே, நல்ல செய்கைகளே ஆகும். உற்றார் சுற்றத்தார் கூடி அழ எமன் உயிர் கவர்ந்து செல்ல வரும்போது, இவ்வுலகத்திலிருந்து, மேலான வீட்டுலகம் செல்ல, பிறவிக் கடல் கடந்து கரையேறத் தெப்பமாகப் பயன்படுவது நல்லறமாகிய தெப்பமேயாகும். இந்தத் தெப்பமாகிய துணையை நல்லறத்தை இழந்தவர்களுக்கு வானுலக வாழ்வு கிட்டாது.

 

 

Comments

Popular posts from this blog