Skip to main content

நல்லறம் ஒன்றே நற்றுணை!

 

நல்லறம் ஒன்றே நற்றுணை!

 

          நாடாண்ட புகழும் தேடிக் கொண்ட செல்வமும் உயிர்க்கு ஊதியமாகாது. செய்யும் நல்லறங்களின் பயனே இம்மைக்கும் மறுமைக்கும் இனிய துணையாகும்.

 

புறநானூறு – பா.எண், 357

பாடியவர் – புலவர் பிரமனார்

திணை – காஞ்சி

துறை – மறக்காஞ்சி, பெருங்காஞ்சி

        ”குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்

         பொதுமை சுட்டிய மூவர் உலகமும்

         பொதுமை இன்ற ஆண்டிசி னோர்க்கும்

         மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே

         வைத்த நன்றே வெறுக்கை வித்தும்

         அறவினை யன்றே விழுந்துணை அத்துணைப்

         புணைகை வீட்டோர்க்கு அரிதே துணையழத்

         தொக்குயிர் வௌவும் காலை

         இக்கரை நின்றியவர்த்து உக்கரை கொளலே”

        சிறு சிறு குன்றுகளையும், சிறு சிறு குன்றுகள் சேர்ந்த பெரிய மலைகளையும், தன்னோடு இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த மண்ணகம், எல்லோர்க்கும் பொதுவென்று சேர, சோழ, பாண்டிய மூவேந்தரும் தமக்கே உரியதென்று தனி ஆட்சி செலுத்தி வந்தார்கள். வாழ்ந்தார்கள். வாழ்ந்த அவர்கள் வாழ்நாட்களும் கழிந்தழிய, அவர்கள் சேர்த்த செல்வமும் அவர்களோடு போகவில்லை. அவர்களுடன் அவர்களுடைய மறுமைக்குத் துணையாக போவதெல்லாம், அவர்கள் செய்த நல்லறமே, நல்ல செய்கைகளே ஆகும். உற்றார் சுற்றத்தார் கூடி அழ எமன் உயிர் கவர்ந்து செல்ல வரும்போது, இவ்வுலகத்திலிருந்து, மேலான வீட்டுலகம் செல்ல, பிறவிக் கடல் கடந்து கரையேறத் தெப்பமாகப் பயன்படுவது நல்லறமாகிய தெப்பமேயாகும். இந்தத் தெப்பமாகிய துணையை நல்லறத்தை இழந்தவர்களுக்கு வானுலக வாழ்வு கிட்டாது.

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...