Skip to main content

வெற்றிப் பாதை (புத்தக மதிப்புரை) வள்ளுவர் வழியில்

  வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில்   இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம்   பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன்   அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...

கணவன் மனைவியின் ஒற்றுமை சாதனம் -மகப்பேறு

 

கணவன் மனைவியின் ஒற்றுமை சாதனம் -மகப்பேறு

         

          இல்லறத்தில் வாழ்வோர்க்குப் புத்திரப்பேறு ஒரு சிறந்த செல்வமாகக் கருதப்பட்டது. கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வளவு கடுமையான சச்சரவு நேர்ந்தாலும் குழந்தைகளிருந்தால் அச்சச்சரவு தலைதூக்காது. அவ்விருவர்க்கும் குழந்தைகளே சமாதானத் தூதர்களாய் நிற்கும். அவர்களுடைய பிணக்கு விரைவில் மறையும். இக்கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் காணப்படுகின்றது.

          வெளியே சென்றிருக்கும் கணவன்மேல் மனைவி கடுங்கோபத்துடன் இருக்கின்றாள். கணவனும் இதைத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு தந்திரம் செய்தான். ”நாம் நேரே அவளிடம் போனால் அவள் நம்முடன் பேசமாட்டாள்” என்று நினைத்தே அவன் அத் தந்திரத்தைக் கையாண்டான். பேசாமல் வீட்டுக்குள் புகுந்தான். அவன் கட்டிலிலே உறங்கும் புதல்வனை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான். அதைக் கண்ட மனைவி, தானும் கட்டிலில் ஏறி தன் கணவனுடைய முதுகுப் புறத்தை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள். இவ்வளவோடு இவர்கள் பிணக்குத் தீர்ந்துவிட்டது.

          ”கண்டிசின் பாண! பண்புடைத் தம்ம!

         மாலைவிரிந்த பசுவெண் ணிலவில்

         குறுங்கால் கட்டில் நறும்பூம் சேக்கைப்

         பள்ளி யானையின் உயிரா அசைஇப்

         புதல்வன் தழீஇனன் விறலவன்

         புதல்வன் தாய் அவன்புறம் கவைஇ யினனே!”(குறுந், 359)

கணவன் மனைவிகளுக்குள் ஒற்றுமை நிலவப் புத்திரப்பேறு ஒரு சாதனம் என்ற கருத்து இப்பாட்டில் அமைந்திருப்பதைக் காணலாம்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...