Skip to main content

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

கணவன் மனைவியின் ஒற்றுமை சாதனம் -மகப்பேறு

 

கணவன் மனைவியின் ஒற்றுமை சாதனம் -மகப்பேறு

         

          இல்லறத்தில் வாழ்வோர்க்குப் புத்திரப்பேறு ஒரு சிறந்த செல்வமாகக் கருதப்பட்டது. கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வளவு கடுமையான சச்சரவு நேர்ந்தாலும் குழந்தைகளிருந்தால் அச்சச்சரவு தலைதூக்காது. அவ்விருவர்க்கும் குழந்தைகளே சமாதானத் தூதர்களாய் நிற்கும். அவர்களுடைய பிணக்கு விரைவில் மறையும். இக்கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் காணப்படுகின்றது.

          வெளியே சென்றிருக்கும் கணவன்மேல் மனைவி கடுங்கோபத்துடன் இருக்கின்றாள். கணவனும் இதைத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு தந்திரம் செய்தான். ”நாம் நேரே அவளிடம் போனால் அவள் நம்முடன் பேசமாட்டாள்” என்று நினைத்தே அவன் அத் தந்திரத்தைக் கையாண்டான். பேசாமல் வீட்டுக்குள் புகுந்தான். அவன் கட்டிலிலே உறங்கும் புதல்வனை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான். அதைக் கண்ட மனைவி, தானும் கட்டிலில் ஏறி தன் கணவனுடைய முதுகுப் புறத்தை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள். இவ்வளவோடு இவர்கள் பிணக்குத் தீர்ந்துவிட்டது.

          ”கண்டிசின் பாண! பண்புடைத் தம்ம!

         மாலைவிரிந்த பசுவெண் ணிலவில்

         குறுங்கால் கட்டில் நறும்பூம் சேக்கைப்

         பள்ளி யானையின் உயிரா அசைஇப்

         புதல்வன் தழீஇனன் விறலவன்

         புதல்வன் தாய் அவன்புறம் கவைஇ யினனே!”(குறுந், 359)

கணவன் மனைவிகளுக்குள் ஒற்றுமை நிலவப் புத்திரப்பேறு ஒரு சாதனம் என்ற கருத்து இப்பாட்டில் அமைந்திருப்பதைக் காணலாம்.

Comments

Popular posts from this blog